யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி கோட்டா பேச்சு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அன தொலைபேசியில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அன தொலைபேசியில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவருடன் கூட்டமைப்பு சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 முதல் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 முதல் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.
குறிப்பாக பல்வேறுபட்ட அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம். முக்கியமாக தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம்பெறும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்தியாவை எமது மக்கள் கூடுதலாகப் பாதுகாப்பின் நிமித்தம் நேசிக்கின்ற ஒரு நிலை உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் குறித்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இடம்பெற்றது.
சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.