மியன்மார் இராணுவ கிளர்ச்சி ஆட்சியை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதா?
12 Mar,2021
மியன்மாரின் இராணுவ குழுவின் வௌிவிவகார அமைச்சருக்கு பிம்ஸ்டென் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடிதம் அனுப்பியது பாரிய இராஜாதந்திர தவறு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வௌிநாட்டு தொடர்புகள் விடயத்தில் எவ்வித தௌிவும் இன்றி செயற்படுவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை வௌிவிவகார அமைச்சர் அனுப்பி கடிதம் மூலம் மியான்மாரின் இராணுவ குழுவை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் இராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆட்சியை கையளிக்க வேண்டும் என பகிரங்க அறிவிப்பு விடுப்பதையே இலங்கை செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.