கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை
04 Oct,2017
இதற்கான அமைச்சரவை யோசனை, அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த கப்பல் சேவையை மீள நடத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.