இன்று நள்ளிரவோடு கலையும் இலங்கை கிழக்கு மாகாண சபை

30 Sep,2017
 

 
 

இன்று நள்ளிரவோடு கலையும் இலங்கை கிழக்கு மாகாண சபை
இலங்கையில் கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றது. இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது.
 
மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படுகின்ற அதேவேளை அடுத்த தேர்தலையடுத்து முதலாவது சபை கூட்டம் நடைபெறும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் பதவியில் இருப்பார்.
 
மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்கீழ் மாகாண சபை கலையும் நாளிலிருந்து தேர்தல் ஆணையம் ஒரு வார காலத்திற்குள் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
 
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டம் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
 
மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தின்கீழ் தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல் தொகுதிகளை எல்லையிட்டு தேர்தலை அடுத்த மார்ச் மாதம் நடத்த உத்தேசித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
 
குறிப்பாக கிழக்கு மாகாண சபை தொடர்ந்து ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதை சிறுபான்மை இன கட்சிகள் விரும்பவில்லை. அது தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள சிறுபான்மை கட்சிகள் விரைவாக தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன.
 
"இந்த வாரத்துடன் பதவி காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல்கள் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை" என்கிறார் கிழக்கு மாகாண சபையின் துணை அவைத் தலைவரான பிரசன்னா இந்திரகுமார்.
 

 
 
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் தொடர்ந்து தள்ளிப் போடுவதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
 
"கடந்த காலங்களை அனுபவ ரீதியாக பார்க்கும்போது கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை பொறுத்தவரை மாதக்கணக்கில் ஆளுநரின்கீழ் இருப்பது சிறுபான்மை இனங்களுக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்திற்குரியது. " என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
 
மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தில் இருக்க வேண்டிய மாகாண சபை ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிடுகின்றார்.
 
மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளுநர் கையாள்வது மக்கள் ஆட்சிக்கு முரணானது என்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
 
 
 
உரிய நேரத்தில அரசு தேர்தலை நடத்த வேண்டும் என்கின்றார் ஹாபிஸ் நசீர் அஹமட்
 
நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் ஆளுநர் ஆட்சியில் பங்கேற்க கூடிய சாத்தியப்பாடுகள் அரசியலமைப்பில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
"கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாகாண சபைக்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையை அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது.
 
மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு தனி நபரிடம் ஆட்சியை கையளிப்பது சர்வாதிகார போக்குடைய நிலைமையை மாகாணத்தில் தோற்றுவிக்கும்.
 
ஆளுநர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் போது சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தும்." என்றும் கூறுகின்றார்.
 
"அரசாங்கம் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும்" என்றும் வலியுறுத்துகின்றார் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் .
 

இறுதி நேரத்திலும் அதிகாரபுர்வ நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
Image caption
இறுதி நேரத்திலும் அதிகாரபுர்வ நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
 
கடந்த செவ்வாய்கிழமை சப்ரகமுவ மாகாண சபை கலைந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் வட மத்திய மாகாண சபையும் கலைகிறது.
 
இந்த மூன்று மாகாண சபைகளுக்கும் அக்டோபர் 2ம் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ஆனால், இறுதியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்த மசோதா அதற்கு தடையாக அமைந்துவிட்டது.
 
மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தை காரணமாக காட்டி அரசாங்கம் குறித்த மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப்போடுவது பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
 
"ஆளுநரின் கீழ் மாகாண சபைகள் நிர்வாகத்தை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு முரணானது" என்று உள்நாட்டு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் குற்றம் சாட்டுகின்றது.
 
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற தவறுவதாகவும், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
 
"இந்த வாரத்துடன் பதவிக் காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டும்" என்று பப்ரல் வலியுறுத்துகின்றது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies