இளைஞர்களை கொடூரமாக தாக்கிய பொலிஸ் சர்ச்சை
30 Sep,2017
மிஹிந்தலை பிரதேசத்தில் இரு இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் குற்ற விசாரணை பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலின ஹேவாபத்திரனவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.