அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்
15 Aug,2017
................................
தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கை தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தென் அமெரிக்காவின் பரகுவேயில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியிலேயே யாழ்ப்பாணம், காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த தம்பதியரின் மகனான நிமலன் என்பரே சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
குறித்த போட்டியில் அவர் 42 கிலோமீற்றர் தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 23 நிமிடங்கள் 53 செக்கன்களில் கடந்து சாதனைபடைத்து இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது இவரது இரண்டாவது மரதன்ஓட்ட போட்டி என்பதுடன் இவரது முதலாவது போட்டி கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்குபற்றி இதே தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 44 நிமிடங்களில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.