குவைத்தில் தீ விபத்து! இலங்கைப் பெண் ஒருவர் பலி
11 Aug,2017
................................
குவைத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குவைத்தின் அடான் பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அரப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் இலங்கைப் பெண்ணும், பிலிப்பைன்ஸ் பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.