கடலில் மூழ்கிய இரண்டு யானைகளை, கடற்படை
03 Aug,2017
..............................
கொழும்பு: இலங்கையில் கடலில் மூழ்கிய இரண்டு யானைகளை, அந்நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.
பல மணி நேர போராட்டம்
திரிகோணமலை காட்டு பகுதியை ஒட்டி உள்ள கடலில், கரையில் இருந்து சில கி.மீ., தூரத்தில், நேற்று இரண்டு யானைகள் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அந்த வழியாக ரோந்து சென்ற கடற்படை வீரர்கள் இரண்டு யானைகளை பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பல படகுகள், நீச்சல் வீரர்கள், யானைகளை கட்டி இழுக்க உதவும் கயிறுகள் உள்ளிட்டவற்றுடன் கடற்படை வீரர்கள் பல மணி நேரம் கடுமையாக போராடி இரண்டு யானைகளையும் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து காப்பாற்றினர். இதே பகுதியில் சில வாரங்களுக்கு முன் இதேபோல், ஒரு காட்டு யானை, கரையில் பகுதியில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த யானை கடற்படை வீரர்களால் காப்பாற்றப்பட்டது.
இது குறித்து கடற்படை உயர் அதிகாரிகள் கூறுகையில் முகத்வார பகுதியை கடந்து செல்லும் யானைகள், நீரில் அடித்து செல்லப்பட்டு கடலுக்குள் சென்று இருக்கலாம் என்றனர்.