சுவிஸ் மக்களை தாக்கும் கொடூர பூச்சி
07 Jul,2014
சுவிசில் டிக் என்னும் பூச்சி விளைவிக்கும் தொற்று நோயால் 6 பேர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சுவிசில் டிக் என்ற பூச்சி ஏற்படுத்தும் பக்டீரியா தொற்று நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிசின் மருத்துவ நுண்ணரியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டிக் என்ற பூச்சி மனிதரை தீண்டுவதால் வரும் இந்த நோய் கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை அழித்துவிடும் வல்லமை கொண்டதாகுவும், இதனை மரபணு சோதனை மூலமாக மட்டுமே கண்டறிய இயலும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இதன் அறிகுறிகளாக எடை குறைவு, மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் ஜேர்மனி,ஸ்வீடன் மற்றும் செக்கோசுவோலாக்கிய உள்ளிட்ட நாடுகளில் வாழும் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்
உலகெங்கும் மொத்தம் 20 பேர் இந்நோயால் அவதிப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.