சுட்டு கொல்லப்பட்ட வட கொரிய தலைவரின் முன்னாள் காதலி தொலைக்காட்சியில் தோன்றியதால் பரபரப்பு
17 May,2014
செக்ஸ் வீடியோ எடுத்ததற்காக சுட்டு கொல்லப்பட்ட வட கொரிய தலைவரின் முன்னாள் காதலி தொலைக்காட்சியில் தோன்றியதால் பரபரப்பு
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன். இவரது முன்னாள் காதலி ஹியான் சாங்-உல். இவர் மொரன்பாங் என்ற இசை குழுவின் தலைவராக இருந்தார். ஹியான், உன்ஹாசு என்ற ஆர்க்கெஸ்ட்ரா இசை குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிற மாநில இசை கலைஞர்கள் ஆகியோர் தங்களுக்குள் வைத்து கொண்ட செக்சை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இது வட கொரிய தலைவர் கிம்மிற்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
முன்னாள் காதலி
வட கொரிய நாட்டு சட்டப்படி செக்ஸ் வைத்து கொள்வதை படம் பிடிப்பது குற்றமாகும். எனவே, கடந்த வருடம் கைது செய்யப்பட்ட கிம்மின் முன்னாள் காதலியான ஹியான் அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினரின் முன்னிலையிலேயே இயந்திர துப்பாக்கி கொண்டு சுட்டு கொல்லப்பட்டார். மற்ற இசை கலைஞர்களையும் இது போன்று துப்பாக்கி வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனை ஜப்பானின் அசாஹி ஷிம்பன் மற்றும் தென் கொரியாவின் ஊடகம் ஆகியவை கடந்த செப்டம்பரில் செய்தியாக தெரிவித்து இருந்தது. இந்த தண்டனை குறித்து தனக்கு தெரியும் என்று தென் கொரிய உளவு பிரிவு தலைவர் நம் ஜே-ஜூன் என்பவரும் கடந்த அக்டோபரில் தெரிவித்து இருந்தார். இதனால் அந்த செய்தி உண்மைதான் என நம்பும்படியாக இருந்தது.
அதனுடன் அசாஹி வெளியிட்ட மற்றொரு செய்தியில், வட கொரிய தலைவரின் மனைவியும், முதல் குடிமகளுமான ரி சால்-ஜூ ஒரு பொழுதுபோக்குவாதி என்பதை மறைப்பதற்காகவும், அவரது வாழ்க்கை முறை குறித்து பரவிய வதந்திகளை தடுப்பதற்காகவும், இசை குழுவை சேர்ந்தவர்களை சுட்டு கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு
இதனால், ஹியான் உயிருடன் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பது தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில், மாநில தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி ஹியான் பேசியுள்ளார். ஹியான் அந்நகரில் நடந்த தேசிய கலைஞர்களின் பேரணியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், கிம்மின் தலைமைத்துவத்தை புகழ்ந்து ஹியான் பேசினார்.
அதனுடன் கலை மற்றும் ஆக்க பணிகளை வளர செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுப்பதற்கு கிம் உறுதி மொழி ஏற்றதற்கும் தனது நன்றி என்று அவர் பேசியுள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.