சுவிஸில் உள்ள புலி உறுப்பினர் ரி.ஐ.டி விசாரணையில் புதிய தகவல்
10 Mar,2014
சுவிஸில் உள்ள புலி உறுப்பினர் : ரி.ஐ.டி விசாரணையில் புதிய தகவல்
கடந்த வாரம் தமிழ் இனத்தின் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டிய இரு இளைஞர்கள் இத்தாவில் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வாசகங்களையும் மீண்டும் தமிழ் இனத்தின் காவலர்கள் வருவார்கள் என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளையும் வைத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இவ் இருவரையும் விசாரணை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களிடம் பெற்பட்ட தொலைபேசி அழைப்புக்களை வைத்து யாழ் ஏழாலைப் பகுதியில் மேலும் ஒரு இளைஞரை கைது செய்தனர். இவர்கள் மூவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த இளைஞர்களை வன்னியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இயக்கியதாகவும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. இது தவிர இம் மூன்று இளைஞர்களுடனும் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் தெரியவருகிறது.
xxxxxx என்பவர் முன்னாள் புலி உறுப்பினர் என்பதுடன் தற்போது சுவிஸ்சிர் வசித்து வருவதாகவும் இவரால் இலங்கையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது