மனிதனின் உடலை பாகம் பாகமாக வெட்டி பிரியாணி செய்து - உண்மை சம்பவம்.
20 Nov,2018
ஐக்கிய அரபு ராட்சியத்தில் வசித்து வந்த மொறோக்கோ நாட்டுப் பெண் தனது காதலனை கொலை செய்து அவனது உடலை பாகம் பாகமாக வெட்டி பிரியாணி செய்து அருகே வசித்து வந்த பாக்கிஸ்தான் நாட்டு வேலை ஆட்களுக்கு கொடுத்த சம்பவம் உலகை அதிரவைத்துள்ளது. 7 வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஒரு நாள் குறித்த பெண்ணிடம் தான் மொறோக்கோ நாடு சென்று தனது பெற்றோர் பார்த்துவைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் காதலனை தனது வீட்டில் வைத்து கொலை செய்த பெண். அவன் உடலை துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிய துண்டுகளாக வெட்டியுள்ளார். அவர் வீட்டுக்கு அருகே வேலைசெய்து வந்த பாக்கிஸ்தான் நாட்டவர்களுக்கு சோறுடன் கலந்து, பிரியாணியாக செய்து கொஞ்சம் கொஞ்சமக கொடுத்து வந்துள்ளார். காதலனின் மிகுதி உடலை அவர் எங்கோ சென்று அதனை எறிந்தும் விட்டார். இன் நிலையில் காதலனின் அண்ணா, இவரைக் காணவில்லை என்று பொலிசாரிடம் கூற. பொலிசார் சென்று குறித்தபெண்ணை விசாரித்துள்ளார்கள்.
அவரது நடத்தையில் சந்தேகமுற்ற பொலிசார் வீட்டை சல்லடை போட்டு தேடியவேளை மா அரைக்கும் மிக்ஸியில் ஒரு பல் காணப்பட்டுள்ளது. அதனை எடுத்து சோதனை செய்த வேளை இறந்து போன நபரின் அண்ணாவின் டி.என்.ஏ யுடன் அது ஒத்துப் போகவே. இறந்தது காதலன் தான் என்பதனை பொலிசார் கண்டறிந்துள்ளார்கள். கடைசியாக ஒத்துக் கொண்ட காதலி. உடலை என்ன செய்தீர்கள் என்று கேட்டவேளை, அதனை பிரியாணி ஆக்கிவிட்டேன் என்று கூறியதும். அருகில் உள்ள வேலை ஆட்களுக்கு இலவச பிரியாணி கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
பிரியாணியை இலவசமாக வாங்கி சாப்பிட்ட பாக்கிஸ்தான் நாட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி அடிக்கிறார்கள். ஆனால் ஓசையே படாமல் கொலை செய்துவிட்டு இத்தனை காரியங்களையும் செய்து முடித்த பெண் மிக மிக சாந்தமாக நடந்ததை எந்த பரபரப்பும் இன்றி கூறியுள்ளார்.