மகளே இன்னுமா என்னை புரிந்து கொள்ளவில்லை
17 Nov,2018
என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை.
ஏன் என்னை விலக்குகிறீர், ரபூனி?
ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்?
உம் சீடர்களைப் பார்க்கிலும்
வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல
உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா?
மரியாளே உன்னை ஒருபோதும் தள்ளிவைக்கவில்லை. அதனால்தான் உயிர்தெழுந்த பின்பு முதல் முதல் உனக்கு காட்சி கொடுத்தேன்
என் பிரியரே,
மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள்.
உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான
ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே?
மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல
உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய
ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே?
போதகரே,
உம் சீடரைப் பார்க்கிலும்
எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர்
உம் சீடரைப் பார்க்கிலும்
நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம்
எனினும்
என்னை ஏன் தள்ளிவைக்கிறீர், ரபூனி?
உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்?
திராட்சைரசம் மணக்கும்
உமது அதரங்களால்
நீர் முத்தமிட்டது என்னைத்தானே?
அப்போது
உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய
புளித்த காடியை உணர்ந்தீரா?
இது எங்கே எப்பொழுது?.....மகளே, நான் வந்த நோக்கம் / உன்னை இரட்சித்தது எல்லம் இந்த இழிவான நோக்கத்திற்கு அல்ல.
சீமோன் மாளிகை விருந்தில்
உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக்
கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப்
பரிமளத்தைலம் பூசினேனே,
அப்போது
உமது பாதங்களைத் துளைத்த ஆணியின்
காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா?
இல்லையே மகளே...அதுதான் அன்றே சொல்லிவிட்டேனே. நற்செய்தி எங்கெல்லாம் பிரசங்கின்றதோ, அங்கெல்லாம் உன்பெயரும் அதில் வரும் என்று.
அன்பரே,
கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில்
நடுங்கி நின்றவள் நானே
பாவமற்ற கரம் எறியட்டும் என்று
என்னை மீட்டவர் நீர் - அப்போது
நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா?
அப்போது
இலக்கு நானல்ல; நீரே என்று
அறியாமலா இருந்தீர்?
இல்லையே.... பிதாவே.மோசேயின் கட்டளைகளை இவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்றள்ளவா எழுதினேன். நீயும் ஆபிரகாமின் குமாராத்தியாக இருக்கின்றாய். மனம் திரும்ம வேண்டுமென்றல்லவா எழுதினேன்.
உம் மீது விழுந்த கசையடியில்
துடிதுடித்தவளும்
உம் சிரசிலிருந்து பெருகிய
ரத்த வியர்வையை ஒற்றியவளும்
உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக்
கையிலேந்தியவழும் நானல்லவா?
அப்போது
உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று
உச்சாடனம் செய்யவில்லையா நீர்?
நிட்சயமாக இல்லை மகளே... பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்னதென்று தெரியாமல் செய்கின்றாகள் என்றல்லவா கதறினேன்.
பின்பு ஏன்
உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்?
ரபூனி,
நான் பற்றிப் பிடித்துக் கொண்டால்
பிதாவிடம் ஏறமுடியாது எனில்
நான் நாங்கள் மரியாள்கள்
விலக்கப்பட்ட கனிகளா?
உயிர்த்த பின் நான் ஆவியாக இருக்கின்றேன் மகளே. எப்படி என்னை தொடுவாய்? உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல. நானிந்த உலகத்தான் அல்ல. என்னை அனுப்பினவரின் திட்டத்தை நிறைவேற்றவே வந்தேன். நான் பிதாவிடம் போகாவிட்டால் எப்படி இந்த உலகத்திற்கு இரட்ச்சிப்பு கிடைக்கும். நித்திய உலகத்தில் என் மக்கள் எல்லொருடன் நீயும் இருப்பாய் மகளே
எனில் போதகரே,
மரியாள்கள் தொடாத நீர்
வயற்புலத்தின் விதையல்ல
பாறைமேல் சிதறிய தானியம்.
உன்னை போன்ற பாவிகளையே அழைக்கவந்தேன். நீதிமன்களை அல்ல. என்பதை பலதடவை கூறியும் இன்னுமா புரியவில்லை பேதை பெண்ணே?
மகளே இன்னுமா என்னை புரிந்து கொள்ளவில்லை. "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கின்ரேன். "