ஐரோப்பா மற்றும் ஆசியா சுதந்திர வர்த்தகத்திற்கு ஆர்வம் காட்டுகின்றன – ஜேர்மன் அதிபர்
19 Oct,2018
ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான பன்முக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ஆர்வம் காட்டப்படுவதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்
இன்று (வௌ்ளிக்கிழமை) பிரசல்ஸ்ஸில் இடம்பெற்ற ஆசிய – ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.
உலகின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான நாடுகள் பன்முகத்தன்மைக்கு உறுதியளித்துள்ளதுடன், சுதந்திர வர்த்தகத்தின் நன்மைகளை அங்கீகரித்துள்ளன.
அங்கு மேலும் உரையாற்றிய ஜேர்மன் அதிபர், “ஒழுங்கின் அடிப்படையிலான ஒரு வர்த்தக நடைமுறை வேண்டும் என்பதுடன், பன்முகத்தன்மைக்கு தங்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இங்கு மாநாட்டில் கூடியுள்ளனர்”
“வர்த்தக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் இந்த கூட்டணி ஒரு முக்கியமான சமிக்ஞையாக விளங்குகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் “வலுவான சுதந்திர வர்த்தகத்தின் ஊடாக இணைப்புகளை உருவாக்குவதே எது குறிகோளாக உள்ளது, இதனூடாக இந்த உலகிற்கு நாம் வெற்றிகரமாக சூழ்நிலைகளை தோற்றுவித்து காட்ட முடியும். இதனை தெளிவாக மேற்கொள்ளும் பட்சத்தில் ஒரு தரப்புக்கு லாபம் கிடைக்கும் அதேசமயம் மற்றைய தரப்பினருக்கு சிறந்த அனுகூலமாக அமையும்” என்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல் குறிப்பிட்டார்.