கொழும்பில் அன்டனி ராஜ் மீது, இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மனைவி கவலைக்கிடம் ..
20 Mar,2018
கொழும்பில் சற்று முன்னர் ஆமர் வீதியில் பயணித்த அன்டனி ராஜ் மீது, இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார் . மெஸேன்ஜர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.இவ்வாறு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதான அன்டனி ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அருகிலுள்ள சி.சி.டிவி கமரா பதிவை வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்த நபரின் மோட்டார் வண்டியையும் அதன் இலக்கத்தையும் அடையாளம் கண்டுள்ளனர்.இதன் படி கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே சிவப்பு நிற காரில் வந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் சட்டவிரோத ஹெரோயின் விற்பனை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.