மனைவினை கொலை செய்த கணவர் 26 வருடங்களின் பின்னர் கைது
15 Feb,2018
தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவர் 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் கடந்த 1992ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்றது. சந்தேகநபர் தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வந்திருந்தவேளை அவரை சிலாபம் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.