சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை
08 Feb,2018
சுவிஸ் நாட்டில் VAUD என்ற மாகாணத்தில் உள்ள Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் வைத்து இலங்கையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (07-02-2018) அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ் குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவருகிறது.
இளைஞன் தங்கியிருந்த அகதி முகாமில் வைத்தே சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.
கொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யபட்ட இளைஞன் கொலை செய்தவரின் மனைவியுடன் (45வயது ) தகாத உறவு வைத்திருந்ததாக அறிய முடிகிறது.
மேலதிக விபரங்கள் பின்னர்ஸ.. அறியத்தரப்படும்