பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாய்.!! பிறகு நடந்த விபரீதம்..!!
11 Nov,2017
மதுரை மாவட்டம் தென்கரை பகுதியில் சாரதா வித்யாலா பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது.
இந்நிலையில் இந்த பள்ளிக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அப்போது அதில் பேசிய பெண் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
உடனே மோப்ப நாயுகளுடன் விரைந்து வந்த போலீசார் பள்ளிக்கு வந்த மாணவர்களை அனுமதிக்காமல் தடுத்துவிட்டனர்.
பிறகு பள்ளி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தொலைபேசி அழைப்பு வந்த எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரனையில் போன் செய்த அந்த பெண் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் மன அழுத்ததில் இருந்ததாகவும் தனது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடன் இருக்க வேண்டுமென நினைத்தேன்.
இதனால் பள்ளி விடுமுறை விட வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் கூறியுள்ளார்.