பிச்சைகாரரை காதலித்து மணந்த விபச்சார பெண்.! என்ன காரணம் தெரியுமா.!!
17 Sep,2017
பாலியல் தொழிலுக்கு யாரும் விருப்பபட்டு வருவதில்லை. குடும்பத்தால் கைவிடப்பட்டு உடலாலும் மனதாலும் பெண்கள் வேதனை அனுபவிக்கின்றனர்.
ஒரு வேளை சோற்றுக்கு கை ஏந்தும் சூழ்நிலையில் வாழ்க்கையை வெறுத்து சாலையில் நடக்கும் போது ஒரு பெண் ஏறக்குறைய வேசி பட்டத்தை பெற்றுவிடுகிறாள்.
காலத்தினால் இப்படி பட்ட சூழ்நிலையில் தள்ளபடும்பொழுது பாதுகாப்பின்றி நிர்கதியாய் ஆக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் விபசாரத்தின் பிடியில் பேகம் என்ற பெண் சிக்கிக்கொணடார்.
பிறகு அத்தொழிலை விட்டு வெளியே வர நினைத்த பொழுது மழை காரணமாக ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கினார்.
அந்த இடத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளி பிச்சைகாரர் அந்த பெண் அருகில் வந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த பெண் பிச்சைக்காக தான் தன் அருகில் வந்துள்ளார் என நினைத்து தன்னிடம் காசு இல்லை என கூறினார்.
மேலும் அந்த பெண் அந்த நபரிடம் அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறேன் என்றார்.
அப்பொழுது அந்த பிச்சை காரன் தன்னிடம் இருந்த 50 ரூபா பணத்தை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தான்.
ஊனமுற்றதால் என் மனைவி என்னைவிட்டு சென்றுவிட்டால் என்று அந்த பெண்ணிடம் கூறினார்.
இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அதே இடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
அப்பொழுத்து அந்த பெண் பேகத்திற்கு அவர் மீது ஏற்பட்ட கரிசனம் காதலாக மாறியது.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.