உலகில் என்னதான் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி துறைகள் வளர்ந்திருந்தாலும் சில விடயங்கள் விடைகிடைத்த மர்மங்களாய் நீடித்து கொண்டே தான் இருக்கின்றன.
அவைகளுக்கு விஞ்ஞானத்தாலும் பதில் கூற முடியாத நிலையில் உள்ளது. அவ்வாறு விடைபெறாத ஒன்று தான் "பேய்கள்".
குறிப்பாக உலகின் 5 இடங்களில் திகிலூட்டும் பேய்களின் நடமாட்டங்கள் அதிகமாய் நிலைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இப்போது நாம் காண்போம்.
பாழடைந்த மருத்துவமனையில் ஆவிகள்
அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா என்னும் பகுதியில் மேடே(Mayday) என்ற குன்று உள்ளது. இங்கு சுமார் 130 வருடங்கள் பழமைவாய்ந்த மருத்துவமனை அமைந்துள்ளது.
முன்பு 1200 இருந்த இவ்விடத்தில் தற்போது யாரும் இல்லை என்றும், இங்கிருந்தவர்கள் மடிந்து ஆவிகளாய் உலாவுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
திரையரங்கில் திரியும் பேய்
அவுஸ்திரேலியாவின் உள்ள பிரின்செஸ் என்ற திரையரங்கில் உலக புகழ் பெற்ற பெரிடிரிசி என்ற இத்தாலிய பாடகர் கடந்த 1888ம் ஆண்டு தன் இசைகச்சேரியை முடிக்கும் வேளையில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது ஆசை நிறைவேறாமல் இறந்ததால் அவரது ஆன்மா திரையிரங்கேயே சுற்றிவருவதாக கூறப்படுகிறது.
காதல் தோல்வியில் பேயான மந்திரவாதி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பங்கார் கோட்டையில் கடந்த 1573ம் ஆண்டு ராணி ஒருவர் வாழ்ந்து வந்தார்.
இவர் மீது காதல் கொண்ட மந்திரவாதி ஒருவர், ராணி தன் காதலை ஏற்காததால், அப்பகுதியே அழிய வேண்டும் என சபத்ததுடன், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்றும் இக்கோட்டையில் அழும் ஓசைகள் கேட்பதாக கூறப்படுகிறது.
அரண்மனையில் அட்டகாசம் செய்யும் பேய்கள்
ஜப்பானில் உள்ள பிஜி மாகாணத்தில் உள்ள(Aokigahara) ஓகிகஹரா என்ற அரண்மணையை காட்டுப் பகுதி சூழ்ந்துள்ளது.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சாமானிய மக்கள் தங்கள் வாழ்வின் அடைந்த துக்கம் தாளாமுடியாமல் காட்டில் உள்ள மரங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அந்த பேய்களின் ஆதிக்கம் அங்குள்ள அரண்மனையில் மிகுதியாய் இருப்பதால், இப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பொலிசாரின் அனுமதியை பெற வேண்டும்.
கோட்டையை கட்டியாளும் பெண் பேய்
ரோமானியாவில் கேம்பினா என்ற பகுதியில் முடியரசு ஆட்சி காலத்தின் போது ஹாஸ்டூ என்ற குறுநில மன்னர் தனது மகள் லூலிய(19) இறந்ததால் அவருக்காக கோட்டை ஒன்றை கட்டி அலங்கரித்து அதிலே தன் வாழ்வையும் கழித்துள்ளார்.
இங்கு இன்றும் இரவு நேரங்களில் வெள்ளை கவுனுடன் லூலியாவின் ஆவி உலாவி வருவதாகவும், அவர் பியானோ வாசிக்கும் சத்தம் பயங்கரமாக ஒலிப்பதாகவும் கூறப்படுகிறது.
பேய்களை நம்புவது என்பது மூடத்தனம் என ஆர்த்தமாகாது. ஆனால் பெய்களை துச்சமாக எண்ணுவது அபாயத்திற்கு பல விதித்தில் வழிவகுக்கும் என்பதற்கு பல சம்பவங்கள் இன்றும் சான்றுகளாய் விளங்குகின்றன.