“பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா” நடு இரவில் நிசப்தத்தை சிதைத்தபடி அலறிய அலைபேசி எடுத்துப் பார்த்தேன்ஸ இந்த நேரத்துல யாரா இருக்கும் கேள்விக் குறியோடுஸ.
ரவி காலிங் என்று வந்ததுஸ இவன் எதுக்கு இந்நேரத்துக்கு கூப்பிடுரான்? எடுக்கலாமா வேண்டாமா யோசனையிலேயே முதல் அழைப்பு தவறிப்போனது,,, இரண்டாம் அழைப்பை சற்று நிதானித்து எடுத்தேன்ஸ
“டேய் மாப்பிள்ளை நான் சாகப்போறேன்டா உன்ன கடைசியா பாக்கனும்டா,, அழுகை கலந்த குரலில் ரவி?
டேய் என்னடா மச்சி சொல்ற, அடிச்சது இன்னும் தெளியலியா?
"நிசமாத்தான்டா சொல்றேன், நான் சாகப்போறேன் உன்ன பாக்கனும், உடனே கிளம்பி வா " என்று சொல்லிவிட்டு கட்செய்துவிட்டான்ஸ
எமகாதகன்,, இந்நேரத்துக்கு எதுக்கு இப்படி போன் பண்ணி டார்ச்சர் பண்றான்?,, நிசமா சொல்றானா அல்லது பொய்யானு தெரியலை,, போகலாமா வேண்டாமா? இரண்டு வித யோசனை எனக்குள்ஸ
போகலாம் என்றாலும் இந்நேரத்துக்கு வீட்டில் என்ன காரணம் சொல்லி புறப்படுவது? என் பொண்டாட்டிக்கு முன்னமே என்மேல நம்பிக்கை இல்லை நண்பன பாக்க இந்நேரம் போகணும்னா,, நாளைக்கு காலையில கோர்ட் வாசல்லதான் நிக்கனும்,, எப்படி சொல்லி அனுமதி கேட்பது,, அவளுக்கு தெரியாம போனாலும் எவவீட்டுக்கு போனீனு காலையில ஆரம்பிச்சுடுவா,,
என்ன பிரச்சனைனு திரும்பவும் கேட்டுப் பார்ப்போம் என்று ரவியின் அலைபேசிக்கு அழைப்பு கொடுத்தேன்ஸ.
"நீங்கள் அழைக்கும் எண் தற்சமயம் அணைத்துவைக்கப்பட்டுள்ளது" திரும்ப திரும்ப அதே பதிவு செய்யப்பட்ட கணினி குரல்ஸ
வேற யாருக்கும் போன்பண்ணி தகவல் தரலாம்னா ,,இந்நேரத்துக்கு அந்த குடிகாரன நம்பி சொல்லவும் முடியாது,, ஒருவேளை அவன் குடிச்சுபுட்டு உளரீருந்தா போய் பாக்குரவன் நாளைக்கு நம்பல பின்னி பெடல் எடுத்துடுவான்ஸ.
போகாமல் இருக்கவும் மனம் ஒத்துழைக்கவில்லை,, பல வருட நட்பு ஸ
கட்டிலில் பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த செல்வியை எழுப்பினேன்ஸ
யம்மா
என்னங்க பேசாம படுங்க இந்நேரத்துக்கு தொந்தரவு பண்ணீட்டு நாளைக்கு பாத்துக்கலாம்ஸ
தினசரி கேக்குர பதில்தான் இருப்பினும் இன்றைக்கு அதுக்காய் எழுப்பலியே என்ன செய்யஸ.
மீண்டும் உசுப்பினேன் யம்மா
அவளிடமிருந்து எந்த பதிலும் வரவேயில்லைஸ
சரி என்று ஒரு வெள்ளைத்தாளில் தான் போகும் காரணத்தை கடிதமாக எழுதி வைத்தவன் பின்குறிப்பு என்று போட்டு நான் உன்னை சரியாக ஒன்பது முறை எழுப்பிபார்த்து தோற்றுப்போய்தான் சொல்லாமல் போகிறேன் என்று துணைக்கு சாமியையும் இழுத்து சத்தியம் செய்துவிட்டு திருப்தியோடு கிளம்பினேன்,,,,,
எழுந்தவன் அறையை சாத்திவிட்டு கூடத்து சுவரில் தொங்கிய வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு மறக்காமல் வீட்டு கதவை சாத்திவிட்டு பூட்டு போட்டுவிட்டு கிளம்பினேன்ஸபூட்டை ஒருமுறை இழுத்தும் பார்த்துவிட்டுதான் கிளம்பினேன்ஸ.
ரவியின் வீடு இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறதுஸ அவன் தன் நெருங்கிய நண்பன்.. ரொம்ப நல்லவன்,, ரொம்ப நல்லவனா இருந்தாளே ஏமாத்தரது சுலபம் ஆச்சே,,, அவனும் ஒருமுறையல்ல ஐந்துமுறை காதலில் தோற்றுவிட்டான்ஸ
முதல் தோல்வியில் ஆரம்பித்த குடி அடுத்தடுத்து காதலில் நிறுத்தப்பட்டு கழட்டிவிடுகையில் தொடர்ந்ததுஸ அவன் எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறான்,,, சிலநேரங்களில் மிகுந்த தொல்லையாகவும் தான்ஸ. இதோ இப்போது கிளம்பி போவது போல இதோடு நான்கைந்துமுறை தொல்லை செய்துவிட்டான்ஸ ஒருமுறை வேலையின் போது இவனுக்காய் ஓடிவந்து அலுவலகத்தில் முதலாளியிடம் கடினாமான திட்டு வாங்கியது நினைவில் வந்தது,,,,
பாவிப்பையன் ஒவ்வொருமுறையும் செத்துபோறேனு சொல்லீட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிட்டு நல்லா தண்ணியபோட்டு மல்லாந்துடுவான்.. நான் போயி பதறி அடிச்சு மருத்துவமணை கொண்டுபோனா,, தண்ணி போட்டுதான் மட்டையாகிருக்கான் ,,மத்தபடி ஒன்னுமில்லைனு சொல்லுவாங்க,, பலஆயிரம் கரந்தபின்னாடிஸ
இன்னைக்கும் இது தொடர்கதையா ஆனாலும்கூட,, அவன் சொன்னபின்ன போயி பாக்காம இருக்கமுடியலைஸ வண்டியின் வேகத்தை கூட்டினேன்ஸ இரவுநேரம் வண்டிச்சத்தம் தூங்குவோருக்கு எரிச்சல் ஊட்டியிருக்கும்ஸ
பகல் எல்லாம் உழைத்துக் களைத்தவர்கள் கண் அயர்ந்த நேரத்தில் தூக்கத்தை கெடுப்பதுபோல இத்தனை வேகமாய் வண்டி ஓட்டக்கூடாதுதான் இருப்பினும் நண்பனின் நிலை என்னவென்று தெரியவில்லையேஸ
அவன் வீட்டு முன் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு அவன் வீட்டு கதவில் கைவைத்தேன் அதுதிறந்து கொண்டதுஸ மனம் வழக்கம்போல வெறும் தண்ணியடிச்சு உளரியிருக்கனும் என்று கடவுளிடம் மன்றாடியதுஸ
வேகமாய் விரைந்து அவன் படுக்கையை நெருங்கினேன் அவனை காணவில்லை,, எங்கே போயிருப்பான் இந்தநேரத்தில் என்று சமயல் அறை,, குளியல் அறை என துழாவிவிட்டு பின் பக்க கதவு திறந்திருந்தது போய்பார்த்தேன்ஸ.
கிணத்து மேட்டு சுவற்றில் பாதி தொங்கியபடி கிடந்தான்,,, ஓடிச்சென்று இழுத்துவந்து மெத்தையில் போட்டுவிட்டு இம்முறை பதறாமல் அவன் மணிக்கட்டை பிடித்துப்பார்த்தேன்.... என் இதயத்துடிப்பின் வேகம் என் காதுவரை கேட்டது,,, மீண்டும் மூக்கின் அருகில் விரல் வைத்துப்பார்த்தேன் லேசாய் மூச்சுவருவதாய்தான் தெரிந்தது,,, எதற்கும் மருத்துவமணை கொண்டுபோகலாமா என்று நினைத்தேன்,,, மீண்டும் வேண்டாம் காசுபோறது மட்டுமில்லாம அங்க நர்ஷ் பேசுற பேச்சுவேற கேக்க முடியாதுஸ தண்ணீரை எடுத்து வந்து தலைமீது ஊற்றினேன்.. லேசாய் அசைந்தான்.. ஆஹா மாப்புளை மப்புலதான் கிடக்கான் சரி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று படுத்தேன்ஸ
டேய் மாப்புளை எழுந்திரிடா ரவி கையில் காபியுடன் எழுப்பினான்?
எப்படா மாப்புள வந்த நீ?
டேய் என்கோவத்தை கிளராத உன்ன பாக்க என்னமோ நான் ஒறம்பரைக்கு வந்ததுபோல கேக்குர,,,
அர்த்தராத்திரியில போனபோட்டு நான் சாகப்போறேனு சொல்லிக்கிட்டு கிணத்துமேட்டுல நீ கமலஹாசனாட்டம் நடனம் ஆடிக்கிட்டு இருந்திருக்கஸ நான் அங்கிருந்து பதறி அடிச்சு வாரேன்,,, பாழாப்போன குடியத்தான் விட்டுத்தொலையேன்டா,,, ஓவரானா நீ படர கஸ்டத்தவிட நாந்தான் படுரதுதான் அதிகம் ஸ.
ஓ சாரி டா என்ன மன்னிச்சிருடா,,, எனக்கு இருக்கிறது நீதான் டா மாப்புளை,, எனக்குனு யாருஇருக்கா? நான் ஒவ்வொருமுறையும் செத்துடனும்னுதான் திட்டம் போட்டு பண்றேன் ஆனா சாகரத்துக்கு முன்ன உன்ன பாக்கணும்னு தோணுதுடா மாப்புளை,, ஒருவேளை நான் செத்துப்போய்ட்டா இங்க நாரிப்போய் கிடக்க கூடாதுல நீ வந்து தூக்கிப்போட்டு போவட்டும்னுதான் உனக்கு சொல்லிப்புட்டு முயற்ச்சிக்கிறேன்டாஸ.
அவன் சொல்லும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லைஸ டேய் என்ன நீ நண்பனா நினைக்கிறது நிசம்னா இனிமே குடிக்காத,, சாவணும்னு நினைக்காத உனக்கு யாருமில்லைனு யாரு சொன்னாங்க நான் இருக்கேன்டா இந்த அரத்தராத்திரியிலும் ஆயிரம் கவலையோட ஓடிவந்து பாக்குரேன் இல்ல இனிமே இப்படி பண்ணாத ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினேன்ஸ
பலமுறை என்பதால் இம்முறை நிறைய நிதானத்தோடு செயல்பட்டு விட்டேன்,,, மணி ஒன்பதை தாண்டியிருந்தது ஸ. எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொண்டு வண்டியை கிளப்பினேன்,,,,
அச்சோ அவளை வீட்டுக்குள்ள விட்டு வெளியில பூட்டீட்டு வந்துட்டனே அடுத்த போர்களத்துக்கு நான் தயார் ஆகிக்கொண்டிருக்கிறேன்ஸ.