பெங்களூரில் தலைமறைவாக இருந்த 4 போடோ பயங்கரவாதிகள் கைது
13 Jun,2015
பெங்களூரில் தலைமறைவாக இருந்த 4 போடோ பயங்கரவாதிகள் கைது
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்து பெங்களூரில் தலைமறைவாக போடோ பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதானவர்கள், தோனார் பசுமத்ரி, சந்தன் பசுமத்ரி, நசீன், ஜீபால் நர்சரி என்று தெரியவந்துள்ளது. இவர்களை போல மேலும் பல தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான 4 பேரும் இங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததார்கள் என தெரிய வந்தது.