அமெரிக்க சிறுமி பாலியல் பலாத்காரம்: தமிழக மதபோதகர் குற்றவாளியாக அறிவிப்பு
04 Jun,2015
அமெரிக்க சிறுமி பாலியல் பலாத்காரம்: தமிழக மதபோதகர் குற்றவாளியாக அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மதபோதகரான இவர் அமெரிக்காவில் வசித்தார். அங்குள்ள மின்ன சோட்டா மாகாணத்தில் பணிபுரிந்தார்.
கடந்த 2005–ம் ஆண்டு இவர் 16 வயது அமெரிக்க சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தலைமறைவாகி இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். அமெரிக்க போலீசார் இந்திய போலீசார் உதவியுடன் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் ஜோசப் பழனிவேல் ஜெயபாலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜோசப் பழனிவேலுவை குற்றவாளியாக அமெரிக்க கோர்ட்டு அறிவித்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வருகிற 15–ந்தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. தற்போது ஜோசப் பழனி வேலுக்கு 60 வயதாகிறது.