ரூ.1 கோடி தங்கம் கடத்திவந்த இரு பெண்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது
23 Feb,2015
ரூ.1 கோடி தங்கம் கடத்திவந்த இரு பெண்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது
துபாய் மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை ரகசியமாக கடத்தி வந்த இரு பெண் பயணிகளை டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹாங்காங் நகரில் இருந்து நேற்று டெல்லி வந்திறங்கிய ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் முழுமையாக சோதித்தபோது அவரிடம் இருந்து 2.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், துபாய் விமானம் மூலம் டெல்லி வந்த இன்னொரு பெண்ணின் உடைமைகளை சோதனையிடுகையில் 1.1 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன என டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இரு பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3.8 கிலோ தங்கத்தின் மொத்த விலை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறினர்.