கொபேன், சிரியா: குர்திஷ் படையில் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வந்த பெண் வீராங்கனை ரெஹேனா என்பவரை உயிருடன் பிடித்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இவரது மரணச் செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு இணையதளங்களிலும் இந்த மரணச் செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது. குர்திஷ் படையில் இருந்தபோது நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்தவர் ரெஹேனா என்பது குறிப்பிடத்தக்கது.
குர்திஷ் வீரத்தின் அடையாளம்
குர்திஷ் படையின் வீரத்திற்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இந்த ரெஹேனா. மிகுந்த துணிச்சலுடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ரெஹேனா என்பது புணைப் பெயர்
ரெஹேனா என்பது இவரது உண்மையான பெயர் அல்ல. புணை பெயர்தான். சிரிய எல்லையில் இவர் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்தார். 100 தீவிரவாதிகளை வீழ்த்திய வீராங்கனை இவர் தனிப்பட்ட முறையில் 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெருமைக்குரியவர் ஆவார்.
டிவிட்டர் மூலம் பிரபலம் இவர் வெற்றிக்கான இலச்சினையான வி என்று இரட்டை விரலை காட்டும் படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் போட்டு விட உலகம் முழுவதும் பிரபலமானார் ரெஹேனா.
5000 முறை ரீட்வீட் இந்த டிவிட் 5000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ஆனால் அந்த தீரம் மிகுந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று செய்திகள் வருகின்றன. குர்திஷ் பெண்கள் படையின் வீராங்கனை ரெஹேனா, குர்திஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
தலை துண்டிக்கப்பட்ட படம் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரைக் கொன்று தலையைத் துண்டித்து துண்டித்த தலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
பயங்கரமான கொபேன் நகரில் சிரியாவில் உள்ள கொபேன் நகரில்தான் போரில் ஈடுபட்டிருந்தார் ரெஹேனா. இந்த கொபேன் நகரமானது 3 பக்கங்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இன்னொரு பகுதியை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்திருந்து போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க விமானப்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி ஆதரவு தந்து வருகிறது.
ஒரு மாதமாக உக்கிரமான போர்
கடந்த ஒரு மாதமாக இந்த கொபேன் நகரில் தீவிரவாதிகள் உக்கிரமாக தாக்கி வருகின்றனர். ஆனால் குர்திஷ் படையினர், அமெரிக்கப் படையினரின் உதவியுடன் அதை முறியடித்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான பெண்கள்
குர்திஷ் படையின் மகளிர் பிரிவில் ஆயிரக்கணக்கான பெண்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் கலக்கி வருகின்றனர்.
10,000 பெண்கள்
இந்த படையானது ஏப்ரல் மாதம்தான் உருவானது. தற்போது 10,000 பெண்கள் இதில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கு.
சுருக், துருக்கி: சிரியாவைச் சேர்ந்த குர்து இன மக்கள் அமெரிக்க படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ஒபாமா என்று பெயரிட்டு வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தங்களைக் காக்க அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் நெகிழ்ந்து இதுபோல பெயர் சூட்டுகின்றனர் குர்து இன மக்கள்.
அயின் அல் அரப் என்ற ஊரைச் சேர்ந்த சுல்தான் முஸ்லீம் என்ற குர்து இன நபர் தனக்குப் பிறந்த 7வது குழந்தைக்கு ஒபாமா என்று பெயர் சூட்டியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தனது குழந்தை துருக்கியில் பாதுகாப்புடன் பிறக்க அமெரிக்கப் படையினரே காரணம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
நிம்மதிஸ
சிரிய எல்லைப் பகுதியில் உள்ள கொபானி என்ற குர்து பிரேதசத்தில் வசிக்கும் அனைவருமே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்தவர்கள் ஆவர். தற்போது அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் விமானத் தாக்குதலால் இவர்கள் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து சற்று தப்பி நிம்மதியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசவம்ஸ
சுல்தான் முஸ்லீம் கர்ப்பமாக இருந்தபோது கொபானியிலிருந்து தனது கணவர் மற்றும் ஆறு குழந்தைகளுடன் எல்லையைக் கடந்து துருக்கிக்குள் சென்றார். அங்குதான் அவருக்குப் பிரசவம் நடந்தது. தான் பாதுகாப்பாக துருக்கிக்குச் செல்வதற்கு அமெரிக்கப் படையினர் எடுத்த நடவடிக்கையே காரணம் என்று இவர் நன்றியுடன் கூறுகிறார்.
அமெரிக்கப் படையினர்ஸ
கடந்த சில வாரங்களாக கொபானி பகுதியில் அமெரிக்கப் படையினர் தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அங்கிருந்து தீவிரவாதிகள் விலகி ஓடி வருகின்றனர். மேலும் முன்னேற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
நன்றிக்கடன்ஸ
35 வயதாகும் சுல்தான் தற்போது சுருக் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். இது துருக்கிக்குள் உள்ளது. தனது குழந்தைக்கு ஒபாமா என்று பெயர் சூட்டியது குறித்து அவர் கூறுகையில், நான் இதயப்பூர்வமாகவே இந்தப் பெயரைச் சூட்டியுள்ளேன். இதை மாற்றவே மாட்டேன். அவர்தான் விமானங்களை அனுப்பினார், உதவிகளை அனுப்பினார்.
அவதிஸ
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் எல்லையில் பல நாட்களாக தவித்து வந்தோம். தண்ணீர் இல்லை, உணவு இல்லை. உடுத்த உடை கூட இல்லை. போர்வை இல்லை. கர்ப்பிணியாக நான் பெரும் தவிப்புக்குள்ளாகியிருந்தேன். குளிக்கக் கூட முடியாத நிலை என்றார் அவர்.
குர்துகளாகப் பிறந்தது தவறாஸ?
சுல்தான் முஸ்லீமின் கணவரான மஹ்மூத் பெக்கோ கூறுகையில், எங்களது மகனுக்கு முகம்மது ஒபாமா முஸ்லீம் என்று பெயர் வைத்துள்ளோம். எங்களுக்கு ஒபாமா மேலும் உதவ வேண்டும். நாங்கள் வீடு திரும்ப உதவ வேண்டும். நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். ஆனால் குர்து என்பதால் தாக்கப்படுகிறோம். நாங்கள் குர்துகளாகப் பிறந்தது எங்களது தவறா என்றார் அவர்.
ஒபாமாஸ ஒபாமாஸ
இவர் மட்டுமல்ல மேலும் பலரும் கூட தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒபாமா என்று பெயரிட ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளனர். சுருக் பகுதியில் ஏராளமான துருக்கியர்களும், குர்துக்களும் கூடியுள்ளனர்.
அமெரிக்க விமானப்படை தீவரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அவர்கள் ஒபாமா ஒபாமா என்று குரல் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.