சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்
27 Jun,2014
சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்
சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா, இலைகளை பொடி செய்து செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மண் பாத்திரத்தில் பொடிகளை பேட்டு 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக காய்ச்சிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். தினமும் 100மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
5நாளைக்கு ஒரு முறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ஒன்று. வழக்கமாக அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இரவில் உணவின் அளவை பாதியாக குறைக்க வேண்டும். உடல் கட்டுப்பாடுக்கு ஏற்ப 20 முதல் 30நாட்களுக்கு கஷாயத்தை தொடர்ந்து குடிக்க வேண்டும்.
சர்க்கரைநோயினால் ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:
மா இலை, அத்தி இலை, ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்கபோகும் முன் புண் மீது தடவி வந்தால் நோய் குணமாகும். பகல் நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் பாதாம் பருப்பு:
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் டைப்2 நீரிழிவு நோய் குணமாகும். நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையும் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹர்மோனை பயன்படுத்தும் திறன் குறைகிறது. இந்த நோயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரா விட்டால் குளுக்கோஸீம், கொழுப்பும் உடலில் அதிகநேரம் தங்கி இருந்து உடல் உறுப்புகளை தேசப்படுத்தும். இதை தடுக்க பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சூலின் அதிகளவில் சுரக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவும் குறையும்.
நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன்:
பாதாம் பருப்பை போல இதர கொட்டை பருப்புகளும் டைப் 2 நீரிழிவுநோயை கட்டுபடுத்துவதாக ஆய்வில் கூறப்படுகிறது. பாதாம் மற்றும் கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுகின்றன. பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை அண்டாது.