அமெரிக்க விமானப்படை P-3 Orion ரக கண்காணிப்பு விமானங்கள், ஜப்பானில் அப்பளமாய் நொருங்கின!
ஜப்பானில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான P-3 Orion ரக கண்காணிப்பு விமானங்கள் (மேலே போட்டோ பார்க்கவும்) குறைந்தபட்சம் 3 , அங்கு ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின்போது, திருத்த முடியாத அளவில் நெருங்கிப் போயின என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, சில பகுதிகள் வாரக் கணக்கில் பனியால் மூடப்பட்ட நிலையில் இருந்தன. அதில் 26 பேர் உயிரிழந்தனர், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், 600 வீடுகள் சேதமடைந்தன.
premium-idஅந்த நேரத்தில்தான், அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் நொருங்கிப் போயின என்ற தகவலை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளன, ஜப்பானிய மீடியாக்கள்.
ஜப்பானிய மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கேயுள்ள அட்சூகி பகுதியில் உள்ள அமெரிக்க வான்படை தளத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
வான்படை தளத்துக்குள், தனியார் கான்ட்ராக்டருக்கு சொந்தமான ஹாங்கர் ஒன்றின் உள்ளேயே இந்த விமானங்கள் பார்க் பண்ணப்பட்டு இருந்தன.
550 அடி நீளம் கொண்ட விமான ஹாங்கருக்குள், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான P-3 Orion ரக கண்காணிப்பு விமானங்களைவிட, மற்றொரு (எந்த ரகம் என்று கூறப்படாத) அமெரிக்க விமானபபடை விமானமும், ஜப்பானிய ராணுவத்துக்கு சொந்தமான மேலும் 6 விமானங்களும் இருந்தன.
கடும் பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், உள்ளேயிருந்த எந்த விமானத்தையும் ஹாங்கருக்கு வெளியே கொண்டுவரவும் முடியவில்லை. இந்த தளத்தை விட்டு வெளியே பறக்கவிடவும் முடியவில்லை.
ஹாங்கரின் மேல் பகுதியில் பனிப்படிவுகள் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் ஹாங்கரின் கூரையின் ஒருபகுதி, பனிக்கட்டிகளின் எடை தாங்க முடியாமல் உடைந்து, 50 அடி உயரத்தில் இருந்து விமானங்களின் மீது விழுந்திருக்கிறது.
அதன்கீழ் பார்க் பண்ணப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான P-3 Orion ரக கண்காணிப்பு விமானங்களும் அப்பளமாக நொருங்கிப் போயின என்றும், அவை மீண்டும் திருத்த முடியாத அளவில் சேதமடைந்து விட்டன.
சம்பவம் நடந்து இவ்வளவு காலமாகியும், இந்த தகவலை அமெரிக்கா ஏன் வெளியிடவில்லை என்பது மர்மமாக உள்ளது. தற்போது வெளியான இந்த தகவலை இதுவரை அமெரிக்கா மறுக்கவில்லை.
தென் கொரியாவில் அடுத்தடுத்து வீழ்ந்த 3 உளவு விமானங்களும், எப்படி புரோகிராம் செய்யப்பட்டு இருந்தன?
தென் கொரியாவில் அடுத்தடுத்து வீழ்ந்த மூன்று உளவு விமானங்களும், புரோகிராம் பண்ணப்பட்டிருந்த விதத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளது தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு.
“வீழ்ந்த உளவு விமானங்களில் செய்யப்பட்டிருந்த புரோகிராம்களில் இருந்து அவை வட கொரியாவில் இருந்தே புறப்பட்டு இங்கு பறந்து வந்தன என்பதை தெரிந்து கொண்டோம்.
premium-idஅது மட்டுமின்றி, எமது (தென் கொரியா) ராணுவ தளங்களுக்கு மேலே பறந்து போட்டோக்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்லும் வகையில் அந்த விமானங்கள் புரோகிராம் செய்யப்பட்டு இருந்தன” என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
வீழ்ந்த உளவு விமானங்கள் புரோகிராம் செய்யப்பட்ட விதம் குறித்து, அமெரிக்க, தென்கொரிய நிபுணர்கள் கூட்டாக ஆராய்ந்தே, இதை கண்டு பிடித்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குறிப்பிடும் மூன்று உளவு விமானங்களும், தென் கொரியாவின் மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் விழுந்தன. கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து 2 வார காலப்பகுதிக்குள் விழுந்த 3 உளவு விமானங்களும், எப்படி விழுந்தன என்பதை தென்கொரியா தெரிவிக்கவில்லை.
அதாவது, இவை தென் கொரிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனவா, அல்லது, தொழில்நுட்ப கோளாறால் வீழ்ந்தனவா என தெரிவிக்கப்படவில்லை.
ஒருவேளை சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் சரி.
ஆனால், தொழில்நுட்ப கோளாறால் வீழ்ந்திருந்தால்.., 2 வார காலப்பகுதிக்குள் 3 உளவு விமானங்கள் வீழ்வதென்றால், ரொம்ப அமெச்சூர்தனமான தொழில்நுட்பமாக அல்லவா இருக்க வேண்டும்!