மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் உயிருடன் உள்ளனர்!
கடந்த 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானத்தை உலக முழுவதிலும் உள்ள நாடுகளின் மீட்புப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் அருகே இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிபட கூறினார். மலேசிய அரசும், அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்துவிட்டதாக அறிவித்து, பயணிகளின் குடும்பத்தினர்களுக்கு அனுதாபமும் தெரிவித்தது. இந்நிலையில் கடலில் மிதப்பதாக கூறப்படும் பொருட்களில் சிலவற்றை சீன போர்க்கப்பல் கைப்பற்றி ஆய்வு செய்ததில் கடலில் மிதக்கும் பொருட்களுக்கும், விமானத்தின் பாகங்களுக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை என்றும், விமானம் இங்கே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மீட்புப்படைகள், விமானத்தை எங்கு தேடுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றன. இந்நிலையில் மலேசிய உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்த தகவல் ஒன்றில் “விமானம் எவ்வித ஆபத்தும் இன்றி பத்திரமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், ஏதாவது அதிசயம் நடந்து பயணிகள் அனைவரும் உயிருடன் திரும்ப வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளார். விமானத்தின் பாகங்கள் எங்குமே கிடைக்கவில்லை என்றால், விமானம் ஏதோ ஒரு இடத்தில் பத்திரமாக இருக்கின்றது என்றுதானே அர்த்தம் என்று மீட்புப்படைகளும் கருத்து தெரிவித்துள்ளன. உரிய விசாரணைகளை இதுவரை எந்த நாடும் உருப்படியாக செய்யவில்லை. அப்பாவி உயிர்களுடன் விளையாடும் மலேசியா அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர பயணிகளின் உறவுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மலேசிய அரசின் இந்த முன்னுக்கு பின் முரணான செய்திகளினால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதுடன் கொந்தளித்து போயுள்ளனர். -
மாயமான விமானத்தின் கடைசி வாசகம் ”குட்நைட் மலேசியன் 370” - மலேசியா புதிய அறிவிப்பு
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 24 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது மீன் பிடி சாதனங்கள் என்று தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.
மாயமான மலேசிய விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ‘‘ஆல் ரைட் குட்நைட்’’ என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘ குட்நைட் மலேசியன் 370 ’’ என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது.
இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசியா அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.விமானம் மாயமானதில் இருந்து மலேசிய அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை அளிப்பதாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில், விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை அழைத்து விரிவான தகவல்களை அதிகாரிகள் நாளை அளிக்க உள்ளனர். இந்த அழைப்பின்போது, மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும் கலந்து கொண்டு விரிவான விளக்கம் அளிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.