விமானம் : தேடப்படும் பகுதி மாற்றம் -- அமெரிக்க புலன் விசாரணை குழு விசாரணை

28 Mar,2014
 

 

மலேசிய விமான மாயம் குறித்து விசாரணை எல்லாக் கோணங்களிலும் நடக்கிறது. அமெரிக்க புலன் விசாரணை குழு

 

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்த விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விசாரணையில் , அனைத்து கோணங்களையும் புலனாய்வாளர்கள் ஆராய்கிறார்கள். எதையும் நிராகரிக்கவில்லை.

இயந்திரக்கோளாறு, மின் தடை, விமானக் கடத்தல், நாசவேலை, விமானி அல்லது இணை விமானி வேண்டுமென்றே எடுத்த நடவடிக்கை, என்று அனைத்துக் கோணங்களிலும் புலனாய்வு நடக்கிறது.

இந்த விமானத்தின் தலைமை விமானி, ஜகாரி அஹமது ஷாவின் வீட்டில் அவர் பயன்படுத்திய, விமானப் பயண விளையாட்டுக்கருவியை அமெரிக்காவின் மத்திய புலன் விசாரணைக் கழக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சி ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய புலன்விசாரணைக் கழகத்தின் தலைவர் ஜேம்ஸ் கோமி கூறினார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் இந்த ஆய்வு முடிந்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.


மாயமான மலேசிய விமானம் : தேடப்படும் பகுதி மாற்றம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.

வியாழனன்று இந்த விமானத்தைத் தேடும் முயற்சிக்குச் சென்ற ஆறு விமானங்களும் தங்கள் தளத்துக்கு திரும்பின.

புதன்கிழமையன்று, பிரெஞ்சு செய்ற்கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்ககூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டுவதாக மலேசியா கூறியது.

இந்தப் படங்கள்தான் இது வரை கிடைத்ததிலேயே மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் அது கூறியது.

இதனையடுத்து  இந்தப் பகுதியில் தேடிய விமானங்கள், மூன்று பொருட்களைக் கண்டதாகவும், ஆனால்,பல முறை திரும்பத் திரும்ப விமானங்கள் பறந்தும், மீண்டும் அவைகளைக் காண முடியவில்லை என்றும் ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அம்சா, கூறி உள்ளது.

இதுவரை, இந்தப் பகுதியில், விமானத்துடன் தொடர்புடைய ஒரு பொருளும் மீட்கப்படவில்லை.

 

இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.

புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மாயாமான மலேசிய விமானம் எம்.எச் 370 முன்பு கருதப்பட்டதை விட வேகமாக பயணம் செய்து இருக்கலாம் என இப்போது கருதப்படுகிறது.

தற்போது தேடும் பகுதியில்  மலேசிய விமானம் குறைந்த உயரத்தில் பறந்து உள்ளதாகவும்  கடலோர கிராம மக்களும் மீனவர்களும் தெரிவித்து உள்ளனர்.

 

.

.

 


 


இந்திய பெருங்கடல் மிகவும் கொந்தளிப்பான பகுதி விமானம் விழுந்த இடத்தை கணிப்பது எளிதல்ல- நிபுணர்கள் கருத்து

 

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில்நடந்து வந்தது. தற்போது அங்கிருந்து 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது  

 தாய்லாந்து செயற்கைகோள்  இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 300 பொருட்களை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரெஞ்சு செயற்கைகோள்  பொருட்கள் கிடப்பதாக கூறிய இடத்தில் இருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கிறது.

 இந்த பிரெஞ்சு செய்ற்கைகோள் அனுப்பிய படங்கள் , இந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து மிதந்து வந்த பொருட்கள் அல்ல, ஒரே இடத்தில் மிதக்கும் விமானப் பொருட்களாக இருக்கலாம் என்று காட்டுவதாக,அப்படங்களை ஆராய்ந்த நிபுணர்கள் கூறினர்.

"இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டால், அவை விமானத்தின் பாகங்கள் என்று தெரிந்தால், அதை வைத்து, விமானம் விழுந்த இடத்தை நிபுணர்கள் கணிக்க  முடியும் , ஆனாலும் அது எளிதாக இருக்காது ", என்று ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடலியல் துறை ஆய்வாளார் , டாக்டர் எரிக் வான் செபில்  கூறினார்.

இந்தப் பகுதியில் கடல் நீர்ச் சுழல் உலகிலேயே மிகவும் பலமானதாக இருக்கும் என்றார் அவர்.

"ஒவ்வொரு நாளும், இது போன்ற உடைந்து மிதக்கும் பொருட்கள் , எளிதாக எந்தத் திசையிலும், 50லிருந்து 100 கிமீ தூரம் வரை அடித்துச் செல்லப்படும்,அந்த அளவுக்கு இந்த இந்தியப் பெருங்கடல் பகுதி கொந்தளிப்பானது" என்றார் வான் செபில்.


 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies