உண்மையுடன் - பொய்
பில்கேட்ஸ் ஆனாலும் மனைவி ஆனாலும் .. நீதி வெல்லும்


ஒருநாள் பில்கேட்ஸ் இறந்து வானுலகம் சென்றார். அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..
பில்கேட்ஸை பார்த்து 'எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதா , இல்லை நரகத்திற்கு அனுப்புவதா என்று,நீங்கள் கணணி விசயத்தில் எவ்வளவோ நல்லது செய்தாலும் மக்களை நீங்கள் ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள்.
நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.... நீங்களே எங்கு செல்லவேண்டுமென்று முடிவ
செய்துகொள்ளலாம்..'
இதை கேட்ட பில்கேட்ஸ் ' சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?'
'நீங்களே ஒரு தடவை இரண்டையும் பார்த்து விடுங்களேன் ' என்று எமன் அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.
முதலில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே அழகான அரண்மனை கடற்கரையில் இருந்தது, அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த இடமும் குளிர் பதன வசதி செய்யப்பட்டிருந்தது..
பில் கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. இது என்ன இடம் என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.. அட நரகமே இப்படின்னா சொர்க்கம் எந்த அளவுக்கு இருக்கும் என நினைத்து கொண்டார்.
அப்புறம் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள், வெள்ளை மேகங்கள் , அழகான பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
உடனே பில் கேட்ஸிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது..நான் நரகத்திற்கே போறேன்.
உங்கள் விருப்பம் என்று பதில் வந்தது..
2 வாரம் கழித்து எமதர்மன், அமரர் பில்லியனர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவரலாம்னு நரகத்திற்கு விசிட் அடித்தார்.
அங்கே ஒரு சுவரில் உடல் முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு , தீ ஜுவாலைகள் மத்தியில் , கருப்பு குகைக்குள் சாத்தான்களால் சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார்.
'எப்படி இருக்கிங்க பில் கேட்ஸ்'
'என்ன ஒரு கொடுமை, நீங்கள் காண்பித்த மாளிகை,கடற்கரை, தேவதைகள் எங்கே?' என்று கேட்டார்.
அதற்கு எமதர்மன் அமைதியாக
'ஓ அதுவா ! அது ஒரு ஸ்கிரீன் சேவர் ' (screen saver)