குழந்தைகளுடன் பாலியல் உறவு: பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
13 Jan,2014
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் பகுதியை சேர்ந்தவர் தெரசா கோடாட்(வயது 45).
இவர் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திற்கு சென்று, அங்கிருந்த இரு குழந்தைகளை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் 26ம் திகதி வாஷிங்டனின் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரசா கைது செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 9ம் திகதி குற்றவாளியான தெரசாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.