பெண் சிறைக் கைதிகள் பாலியல் பலாத்காரம்.. உயிருடன் எரிக்கப்பட்டதாக ஐநா அதிர்ச்சி
09 Feb,2025
கோமா நகரில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நகரை எம் 23 கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றுவதற்கு ரூவாண்டா நாடு உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மேலும் சரண் அடைந்தவர்களை அரசு சிறைக் கைதிகளாக அடைத்து தண்டனை கொடுத்து வருகிறது.
இருப்பினும் கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது அதிரடி தாக்குதல்களை நடத்தி அரசுக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி எம் 23 என்ற கிளர்ச்சி குழுவினர் கோமா என்ற நகரத்தை கைப்பற்றினர்.