தனித்து விட்ட கொடூரம் எனோ?
02 Dec,2024
“முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும்
பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே!
பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும்
புதுமை செய்யும் குழந்தை போன்றே!"
"பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும்
காளையாம் செத்தும் இளமை செத்தும்
மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும்
தனித்து விட்ட கொடூரம் எனோ?"
"பொன்னேர் மேனி அழகு இழந்து
நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும்
மாறாத அன்பு நிலைத்து நிற்க
வயதான மக்களைத் தழுவ வேண்டும்!"
"இளமை நீங்கி உடலும் மெலிய
தளர்ச்சி பெற்று கோலிற் சாய
களைப்பு கொண்ட உள்ளம் ஆற
பாசம் கொடுக்கும் கைகள் தேவை!"