மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்ம பெட்டி... ..மேற்கூரையை இடித்த உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
14 Jun,2024
பழைய வீடுகளை பல நேரங்களில் வினோதமான பொருட்கள், விஷயங்கள் கண்டறியப்படுகின்றன. இதே போன்று ஒரு நபருக்கு அவரது வீட்டின் மேற்கூரையில் ஒரு ரகசியம் கிடைத்துள்ளது. பழங்காலத்து வீடான அந்த வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்துள்ளது.
பெல்ஜியத்தை சேர்ந்த இவர், அந்த தண்ணீர் கசிவை சரி செய்ய வேண்டும் என நினைத்து, மேற்கூரையை இடிக்க தொடங்கினார். அப்போது முழுமையாக இடிக்கப்பட்ட பிறகு தொழிலாளர்கள் அந்த குப்பைகளை அகற்றியுள்ளனர். அதில் இருந்து ஒரு பழமையான பெட்டியை கண்டெடுத்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர், பெட்டியை திறந்த போது, அதற்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது. அது ஜூலை 21, 1941 ஆம் ஆண்டு அன்று எழுதப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் அப்போது வேலை செய்த கூலி தொழிலாளர்கள் எழுதபட்டிருந்த கதை இருந்தது.
அதில், ஜான் ஜான்சன், ஜூல் ஜிசெலின்க், லூயிஸ் சான்ட்ரைன் மற்றும் ஜுல் வான் ஹெமெல்டோன்க் ஆகிய நான்கு பேர் கையெழுத்திட்டனர். விசாரணையில், 82 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேற்கூரையை கட்டிய கூலி தொழிலாளர்கள் தங்கள் வலியை கிடைத்த ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கூரையை மீண்டும் சீரமைக்கும் போது, இதைப் பார்க்க நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம். நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதை வரும் தலைமுறைகளுக்கு சொல்ல விரும்புகிறோம். நாங்கள் இரண்டு போர்களைக் கடந்து வந்திருக்கிறோம். 1914 இல் ஒன்று மற்றும் 1940 இல் ஒன்று. பசி, தாகத்துடன் இங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பலர் பசியால் இறந்துள்ளனர். எங்களிடம் தினமும் உணவு உண்ண போதுமான பணம் இல்லை.
அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரை என்னவென்றால், போர் அச்சுறுத்தல் ஏற்படும் போது, அவர்கள் உயிர்வாழ தேவையான அளவு அரிசி, காபி, மாவு, தானியங்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றை முன்கூட்டியே தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள், மனிதர்களுக்கு வணக்கம்.
இதனை படித்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.