உலகிலேயே இந்த 3 பேரால் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய முடியும் தெரியுமா?
21 Apr,2024
உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, அவர்களிடமும் ராஜதந்திர பாஸ்போர்ட் இருக்க வேண்டும். இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், இந்த மூன்று பிரமுகர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சிறப்பு சலுகை உள்ளது.
இவர்கள் வெளிநாடு பயணம் செய்தால் பாஸ்போர்ட் பற்றி யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. மாறாக, அவர்களுக்கு கூடுதல் விருந்தோம்பல் மற்றும் முழு மரியாதையும் வழங்கப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு நாட்டின் குடிமகன் மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, அவரிடம் வலுவான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உலக நாடுகளிடையே இல்லை. முதல் உலகப்போரும் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் பாஸ்போர்ட் போன்ற நடைமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்துகொள்ளத் தொடங்கியது.
1920 இல் திடீரென்று எல்லாம் மாறியது. அமெரிக்கா தனது நாட்டிற்கு ரகசியமாக வரும் புலம்பெயர்ந்தோரை தடைசெய்யும் வகையில் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் போன்ற அமைப்பை உருவாக்க முன்முயற்சி எடுத்து வந்தது. லீக் ஆஃப் நேஷன்ஸில் அமைப்பில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 1924 இல், அமெரிக்கா தனது புதிய பாஸ்போர்ட் முறையை வெளியிட்டது.
இப்போது பாஸ்போர்ட் என்பது வேறொரு நாட்டிற்கு பயணம் செய்யும் நபருக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையாக மாறிவிட்டது. அதில் அவரது பெயர், முகவரி, வயது, புகைப்படம், குடியுரிமை மற்றும் கையெழுத்து அனைத்தும் உள்ளன. அந்த நபர் செல்லும் நாட்டிற்கு அவரின் அடையாளத்தை கண்டுகொள்ள இது எளிமையான முறையாக மாறியது. தற்போது அனைத்து நாடுகளும் இ-பாஸ்போர்ட் வழங்கும் அளவிற்கு இந்த நடைமுறை முன்னேறியுள்ளது.
உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லாத அந்த 3 சிறப்பு நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும் தான் இந்த சலுகை உள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது.
சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்றவுடன், அவரது செயலர் தனது நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு ஆவணச் செய்தியை அனுப்பினார். இப்போது பிரிட்டனின் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார், எனவே அவரை முழு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும். இதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. இவ்வாறு அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.