காணாமல் போன கடல்..!
10 Feb,2024
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் 'ஆரல்' எனும் கடல் கடந்த 50 ஆண்டுகளுக்குள் காணாமல் போனமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்தக் கடல் உலகின் 4-வது பெரிய கடலாக விளங்குகிறது.
இந்த ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
ஆய்வுகளின்படி, 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியதாகவும் அதிலிருந்து 50 ஆண்டுகளில் கடல் முற்று முழுதாக காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது, சோவியத் ஒன்றியம் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது.
இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன.
கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது
ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டமை பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.