புதிர் நிறைந்த மனித வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை பல எதிர்பாராத விடயங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், மனிதனின் இறப்பை ஒரு சில விலங்குகளுக்கு கணித்து முன்னறிவிக்கும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி, 5 விலங்குகளுக்கு மனிதனின் மரணத்தை முன்னறிவிக்கும் சக்தி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாய்கள்
இதன்படி, நாய்களால் ஒரு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும்.
இதற்கமைய, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஒருவரின் மரணம் நெருங்கும் போது அழத் தொடங்கும்.
எனவே தான் வீட்டில் உள்ள நாய் அழுதால் வீட்டிற்கு நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
பூனைகள்
பழங்காலத்தில் இருந்தே பூனைகள் மரணத்தை முன்னறிவிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஜோதிடத்தின் படி, ஒரு வீட்டில் 2 பூனைகள் சண்டை போடுவது நல்லதல்ல எனவும் அப்படி போட்டால், குறித்த வீட்டில் மரணம் நிகழப் போகிறது என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
கருப்பு பட்டாம்பூச்சி
பலவண்ண பட்டாம்பூச்சிகள் மங்களகரமானவை. ஆனால் கருப்பு நிற பட்டாம்பூச்சி மரணத்தின் தூதர் என கூறுப்படுகிறது.
கருப்பு நிற பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி எனவும் கூறப்படும் நிலையில், இந்த கருப்பு நிற பட்டாம்பூச்சி இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தால், அது அபசகுனமாக கருதப்படுகிறது.
இது மரணத்தை வெளிக்காட்டும் நிகழ்வாக கருதப்படுகிறது.
வௌவால்
மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள் மரணச் செய்தியைக் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க : எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ள ஹரின் பெர்ணாண்டோ
தென் அமெரிக்க பகுதிகளில் வௌவால்களை மரணத்தின் தூதர்களாக கருதுகிறார்கள்.
நரி
பகல் வேளையில் ஒரு நரி வீட்டிற்குள் நுழைந்தால், அந்த வீட்டில் யாராவது இறப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து எப்போதும் விலகி இருக்கும் நரிகள், ஒருவரின் வீட்டுக்குள் வந்தால் மரணம் வரப் போகிறது என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.