அதிகாலை விளக்கேற்ற வாழ்வு ஒளி பெறும்!
17 Dec,2023
‘பிரம்ம முகூர்த்தம்’ என்று சொல்லப்படுவது அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பொழுதை குறிக்கும். இது, பிரம்மனுக்கு உகந்த நேரம். இந்நேரத்தில் எழுந்திருப்பதும், சாத்வீக செயல்களைச் செய்வதும் நினைத்ததை அடையும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருகிறது.
உலகில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால், 99 சதவீதமானவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்தத்தில் எந்த தோஷமும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
தோஷங்கள் எதுவுமற்ற இந்த பிரம்ம முகூர்த்த வேளைதான், விளக்கேற்றுவதற்கும் உரிய நேரமாக சொல்லப்படுகிறது.
இந்த விசேட நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் நமக்கு நன்மையை ஏற்படுத்தித் தரும். குறிப்பாக, சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றி சிவனை வழிபட்டால், சனி தோஷம் தீரும். தரித்திரம் தொலையும்.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனின் குளுமையும் கிடையாது. இதனால், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனம் ஒருநிலைப்படுகிறது. இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது, தியானம் செய்வது, யோகா செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்