பூமிக்கு அடியில் இப்படி ஒரு உலகமா? வியக்க வைக்கும் வியட்நாம் குகை.
09 Dec,2023
,
உலம் முழுவது பல்வேறு அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஓங்கி உயர்ந்த மரங்கள், மலை முகடுகள், ஆறுகள், அருவிகள், மலர் சோலைகள் என என்னற்ற இயற்கையின் படைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆனால் பூமிக்கு அடியில் இன்னொரு உலகம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?.
வியட்னாமில் பூமிக்கு அடியில் 262 மீட்டரில் ஒரு குகை அமைந்துள்ளது. ஹங் சன் டங் எனறு அழைக்கப்படும் இந்த குகை உலகின் மிகப்பெரிய குகையாக உள்ளது. இங்கு பூமிக்கு மேல் இருப்பது போலவே மரங்கள், காடுகள், நதிகள் என ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த குகை கடந்த 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக ஹோ கான் என்ற சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்டது. போங் நா கீ பேங் என்ற சரவதேச பூங்காவில் உணவு மற்றும் மரக்கட்டைகளை தேடி அலைந்த போது அந்த சிறுவன் இந்த குகையை கண்டுபிடித்துள்ளார். குகையை பார்த்து வியப்படைந்த சிறுவன், அதற்குள் சென்று பார்த்துள்ளார். உள்ளே சென்றது பாய்ந்தோடும் அருவியின் ஓசை கேட்டுள்ளது. அதுமட்டுமன்றி காற்றின் ஓசையும் குகைக்குள் கேட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 262 மீட்டரில் நிலப்பரப்பில் இருப்பது போன்று ஓசை கேட்டதால் பயந்துப்போன சிறுவன் அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். பின்னர் அந்த குகையயும் அந்த குகை இருந்த இடத்தையும் சிறுவன் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிறுவன் குகைக்கு சென்று வந்த பல ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த ஹாவர்டு மற்றும் டெப் லிம்பர்ட் ஆகியோர் அந்த தேசிய பூங்காவிற்கு சென்றனர். அப்போது அவர்கள் அந்த குகையை கண்டுபிடித்த ஹோ கானை சந்தித்து பேசினர். குகையை பற்றி அவர்களிடம் பேசிய கான், பூமிக்கு அடியில் குகை மட்டுமல்லாது ஆறுகள், மேகங்கள் கடற்கைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் குகைக்கு சென்று வந்து பல ஆண்டுகள் நிறைவடைந்திருந்ததால் அந்த சிறுவனுக்கு அங்கு செல்லும் வழி மறந்துபோய் இருந்தது. எனவே மூவரும் இணைந்து குகைக்குள் செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் குகைக்கு செல்லும் வழியை கான் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு, கான் மீண்டும் குகைக்கு செல்லும் வழியை கண்டுபிடித்தார். பின்னர் அது குறித்து ஹாவர்டு மற்றும் டெப் லிம்பர்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது 500 அடி அகலம் 660 அடி உயரம் மற்றும் 9 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது என்பது தெரியவந்தது. குகைக்குள் அருவி, ஆறு, காடு உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. பறவைகள், குரங்குகள் மட்டுமன்றி மேலும் பல விலங்குகள் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. ஆரம்பகாலத்தில் இந்த குகைக்குல் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா பயனிகள் சென்று வர முதன் முதலாக அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கு செல்வதற்கு ஒரு ஆண்டுக்கு 250-300 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த 20 முதல் 50 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.