ஆபாச வீடியோ... 100 பெண்களை நாசமாக்கிய கொடூரனுக்கு போலீஸ் வலை!
05 Dec,2023
100க்கும் மேற்பட்ட பெண்களிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி தனிமையில் இருந்தபோது வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்த காம கொடூரனை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலமாக பல்வேறு பள்ளி மாணவிகளிடமும் ,பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் அப்படி தனிமையில் இருக்கும்போது வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததாக தெரிகிறது.
அவற்றை, அந்த பெண்களிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால், அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி அச்சுறுத்தியுள்ளார். இதற்கு பயந்து பல பெண்கள் இவருக்கு பணம் தந்துள்ளனர்.
இந்நிலையில், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல், பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் சங்கராபுரம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, அருண் செல்போனை மட்டும் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.
இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் பிரசாத் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், ஓரிரு தினங்களில் அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.