டுபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவரை கொலை செய்த மனைவி!
25 Nov,2023
தனது பிறந்த நாளுக்கு டுபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவரை தாக்கி கொலை செய்த குற்றத்தில் மனைவி ஒருவர் இந்திய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனே நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.!
உயிரிழந்தவர் இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரின் பிறந்த நாள் என்றும், கடந்த நவம்பர் 5ஆம் திகதி இவர்களது திருமண நாள் என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மனைவி தனது பிறந்த நாளுக்காக டுபாய் செல்ல விரும்புவதாக கணவரிடம் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், இவர்களது திருமண நாளுக்கும் கணவரிடத்தில் இருந்து பரிசுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.
இதனால் கோபமடைந்த மனைவி கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதன்போதே, மனைவி தனது கணவரை தாக்கி கொலை செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.