சகோதரியை காதலித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தியால் குத்திய பிக்கு
16 Nov,2023
,
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கிய 18 வயதுடைய பிக்குவை கைது சம்பவமொன்று வியாழக்கிழமை (16) தெனியாய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபரான பிக்குவின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். குறித்த பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ள போது சந்தேக நபரின் அழைப்பின் பிரகாரம் பல்லேகம கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் சென்றுள்ளதாகவும் , அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காயமடைந்த 37 வயதுடைய கான்ஸ்டபிள் திருமணமானவர் என தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.