அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவுடன் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இன ஒழிப்பு.

12 Nov,2023
 

 
 
.
 
பலஸ்­தீன பொது மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் இன சம்­ஹாரம் மற்றும் காஸாவை நாசப்­ப­டுத்தும் அதன் நட­வ­டிக்­கைகள் என்­பன அமெ­ரிக்­கா­வி­னதும் ஐரோப்­பா­வி­னதும் கண்­மூ­டித்­த­ன­மான ஆத­ர­வுடன் இடம்­பெற்று வரு­கின்­றன. இது காஸாவை சுற்­றி­யுள்ள மதச்­சார்­பற்ற அரபு சர்­வா­தி­க­ரி­களின் அர­சியல் மற்றும் இரா­ணுவ வங்­கு­ரோத்து நிலை­யையும் புடம் போட்டு காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. இந்த இன ஒழிப்பு நட­வ­டிக்­கையை நிறுத்த அவர்கள் இது­வரை எந்த உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை.
 
கடந்த ஒரு மாத காலத்­துக்கும் மேலாக பலஸ்­தீன மக்­களை நீரின்றி, உண­வின்றி, மின்­சா­ர­மின்றி, மருந்­துகள் இன்றி எரி­பொருள் இன்றி ஏனைய எந்த அத்­தி­யா­வ­சிய வச­தி­களும் இன்றி வாட்டி வதைத்து, மக்­களை அன்­றாடம் கொத்து கொத்­தாக கொன்று குவித்து வரும் காட்­டு­மி­ராண்டித் தனத்தை கண்­டிக்கக் கூட வக்­கின்றி, காஸாவை சுற்றி வாழும் அர­பு­லகம் ஸ்தம்­பித்துப் போய் உள்­ளது.
 
மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தின் இன்­றைய கேவ­ல­மான மிகவும் துர­திஷ்­ட­வ­ச­ட­மான நிலை என்­ன­வென்றால் இந்த அர­பு­லக சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்கள் தமது இரா­ஜ­தந்­திர பிர­தி­நி­தி­களை கூட இன்­னமும் இஸ்­ரேலின் தலை­நகர் டெல் அவிவ்வில் இருந்து திருப்பி அழைக்கத் துணி­வில்­லாமல் உள்­ள­மைதான்.
 
ஜோர்தான், எகிப்து, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரேன், சூடான், மொரோக்கோ ஆகிய நாடு­களில் இஸ்­ரே­லிய தூத­ர­கங்­களில் இன்­னமும் அதன் தேசியக் கொடி பறந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், பொலி­வியா, கொலம்­பியா, சிலி போன்ற நாடுகள் பலஸ்­தீ­னத்தில் இடம்­பெறும் இன­ஒ­ழிப்பை கண்­டித்து இஸ்­ரேலில் உள்ள தத்­த­மது தூது­வர்­களை திருப்பி அழைத்­துள்­ளன.
 
மூன்று வார கால­மாக மேற்­கொள்­ளப்­பட்ட ஓய்­வற்ற குண்டு வெடிப்­புக்கள் மூலம் ஒன்­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட பலஸ்­தீன அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்ட பின், காஸாவின் கிட்­டத்­தட்ட அரை­வாசிப் பகுதி தரை மட்­ட­மாக்­கப்­பட்ட பின், பஹ்­ரேனும் ஜோர்­தானும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி காஸாவில் இன­ஒ­ழிப்பை நிறுத்­து­மாறு இஸ்­ரேலைக் கேட்டுக் கொண்­ட­தோடு தமது தூது­வர்­க­ளையும் திருப்பி அழைத்துக் கொண்­டன. கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை தற்­போது பத்­தா­யி­ரத்தை தாண்­டி­விட்­டது
 
இஸ்­ரேலில் முடி­வு­களை எடுக்கும் செயற்­பாட்டில் மக்கள் பங்­க­ளிப்­புக்­களை வழங்­கு­கின்­றனர். அந்த வகையில் அவர்கள் அர­சாங்­கத்தின் மீது செல்­வாக்கு செலுத்­து­கின்­றனர். ஆனால் அர­பு­லகம் முழு­வதும் ஓரங்க சர்­வா­தி­கார ஆட்­சியே இடம் பெறு­கின்­றது. அங்கே பொது­வாக மக்­களும் குறி;ப்பாக புத்­தி­ஜீ­வி­களும் அடி­மை­களைப் போலவே நடத்­தப்­ப­டு­கின்­றனர். கொஞ்­ச­மா­வது சுதந்­தி­ரத்­தையும் தமக்­கான அங்­கீ­கா­ரத்­தையும் பெற்றுக் கொள்ள அவர்­களில் பலர் மேற்­கு­லக நாடு­களில் குடி­யேறி உள்­ளனர்.
 
பலஸ்­தீ­னத்தை சுற்­றி­யுள்ள கையா­ளா­காத அர­பு­லக சர்­வா­திகள் மத்­தியில் பலஸ்­தீன அதி­கார சபையின் தலைவர் மஹ்மூத் அப்­பாஸும் இடம் பெறு­கின்றார். அவர் அங்கே தேர்­தலை நடத்­தாமல் தொடர்ந்தும் அதி­கா­ரத்தில் இருக்­கின்றார். அதற்­கான ஆத­ரவும் நிதி உத­வியும் அப்­பா­ஸுக்கு அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்­ரே­லிடம் இருந்து தாரா­ள­மாகக் கிடைக்­கின்­றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு அவர் இஸ்­ரேலின் கொடிய நிகழ்ச்சி நிரலை தமது மக்­க­ளுக்கு எதி­ரா­கவே அமுல் செய்து வரு­கின்றார்.
 
இந்த மதச்­சார்­பற்ற சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்­ப­ன­வற்றால் மிகக் கவ­ன­மாக வடி­கட்டித் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். தத்­த­மது கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் எந்­த­வ­கை­யான இஸ்­லா­மிய சக்­தி­களும் தலை­தூக்கி விடக் கூடாது. அதில் மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும் என்­ப­துதான் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள தெளி­வான செய்­தியும் கட்­ட­ளையும் ஆகும்.
 
உதா­ர­ணத்­துக்கு 1991 டிசம்­பரில் அல்­ஜீ­ரி­யாவில் இடம்­பெற்ற தேர்­தலில் இஸ்லாம் சார்பு கட்­சி­யான எவ்.ஐ.எஸ். 188 ஆச­னங்­களை வென்று அமோக வெற்­றி­யீட்­டி­யது. ஆனால் பிரான்ஸும் அல்­ஜீ­ரி­யாவில் உள்ள அதன் மதச்­சார்­பற்ற கைக்­கூ­லி­களும் சேர்ந்து இஸ்­லா­மிய சக்­தி­களை நசுக்கி எவ்.ஐ.எஸ். ஆட்­சி­பீடம் ஏற விடாமல் தடுத்து மதச்­சார்­பற்ற இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்­சியை அங்கு ஸ்தாபித்­தன.
 
எகிப்தில் 2010- ௧1 அரபு வசந்த போராட் டத்தின் பின் இடம்­பெற்ற தேர்­தலில் இஸ்­லா­மிய ஆத­ரவு சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் முஹம்மத் முர்ஷி ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்றார். இதனால் விழிப்­ப­டைந்த அமெ­ரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகி­யன சவூதி அரே­பியா, குவைத், ஐக்­கிய அரபு அமீ­ரகம் ஆகி­ய­ன­வற்றை ஒன்­றி­ணைத்து 11 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை செல­விட்டு செயற்­கை­யான பல பிரச்­சி­னை­களை எகிப்தில் உரு­வாக்கி முர்­ஷியை பத­வியில் இருந்து வீழ்த்­தின.
 
அதன் பிறகு அங்கும் மேற்­கு­ல­கி­னதும் இஸ்­ரே­லி­னதும் ஆத­ரவை வென்ற இரா­ணுவ சர்­வா­தி­காரி அப்துல் பத்தாஹ் சிசி பத­வியில் அமர்த்­தப்­பட்டார்.
 
சவூதி அரே­பி­யா­வுடன் 100 பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான ஆயுத உடன்­ப­டிக்­கையை செய்து கொண்ட முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், அமெ­ரிக்­காவின் ஆத­ர­வின்றி சவூதி அரே­பிய அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடி­யாது என பகி­ரங்­க­மாகக் கூறினார்.
 
அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பிய நாடு­க­ளி­ட­மி­ருந்து பில்­லியன் கணக்­கான டொலர்­களை கொடுத்து ஆயு­தங்­களை இறக்­கு­மதி செய்யும் முக்­கி­ய­மான ஒரு ஆயுத இறக்­கு­மதி நாடு தான் சவூதி அரே­பியா. அதனால் பலஸ்­தீன மக்­களைக் காப்­பாற்றும் நோக்கில், இந்த ஆயு­தங்கள் எதையும் அது ஒரு போதும் இஸ்­ரே­லுக்கு எதி­ராகப் பாவிக்கப் போவதும் இல்லை. பாவிக்­கவும் முடி­யாது. அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய அதன் நிலை­மையும் இஸ்­ரே­லு­ட­னான அதன் இர­க­சிய உற­வு­களும் ஒரு போதும் இதற்கு வழி­விடப் போவ­தில்லை.
 
சவூதி அரே­பியா தனது ஆயு­தங்­களை அண்மைக் காலத்தில் யேமன் தேசத்­துக்கு எதி­ராகத் தான் பாவித்­துள்­ளது. யேமனில் இந்த ஆயு­தங்­களைப் பாவித்து நவீன உலகின் மிகவும் மோச­மா­னதோர் மனி­தா­பி­மான நெருக்­க­டியை அங்கு தோற்­று­வித்­தது. மேலும் ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி யேமன் மக்­களை அது கொன்று குவித்­த­தோடு யேமனின் உள்­கட்­ட­மைப்­பையும் முற்­றாக சிதைத்து விட்­டது.
 
இஸ்­ரேலின் மூர்க்­கத்­த­ன­மான அடக்கு முறைக்கு கடந்த பல தசாப்­தங்­க­ளாக ஆளாகி உள்ள பலஸ்­தீன மக்­களைக் காப்­பாற்ற சவூதி அரே­பியா இது­வரை எதையும் செய்­த­தில்லை.
 
மறு­பு­றத்தில் பலஸ்­தீன மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்கு பதி­லாக ஐக்­கிய அரபு அமீ­ரகம் இஸ்­ரே­லுக்கு பல உத­வி­களைச் செய்­துள்­ளது. செய்து வரு­கின்­றது. 2020ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் அறி­மு­க­மான ஆபி­ர­காமின் உடன்­ப­டிக்­கையில் கையொப்­ப­மிட்­டுள்ள பிர­தான நாடான அமீ­ரகம், அக்­டோபர் எட்டாம் திகதி ஒரு அறிக்­கையை விடுத்­துள்­ளது. அதில் இஸ்­ரே­லுக்கு எதி ராக ஹமாஸ் இயக்கம் மேற்­கொண்­டுள்ள இந்தத் தாக்­குதல் ஒரு பயங்­க­ர­வாதச் செயல் என்றும், இஸ்­ரே­லிய நிலைகள் மீது ஆயி­ரக்­க­ணக்­கான ரொக்­கட்­டுக்­களை ஏவி­யமை மோதல்­களைத் தூணடும் ஒரு பார­தூ­ர­மான செயல் என்றும் வர்­ணித்­துள்­ள­தோடு இஸ்­ரே­லிய மக்­களை பணயக் கைதி­க­ளாக சிறைப்­பி­டித்­த­மைக்­காக ஹமாஸ் இயக்­கத்தை வன்­மை­யாகக் கண்­டித்தும் உள்­ளது.
 
22 அரபு நாடு­களில் ஒன்­பது நாடுகள் உட­ன­டி­யான யுத்த நிறுத்­தத்­துக்­கான அழைப்பை ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் விடுத்­துள்­ளன. பலஸ்­தீ­னத்தின் காஸா மற்றும் மேற்குக் கரை பகு­தி­களில் இடம்­பெற்ற அப்­பட்­ட­மான மனி­தா­பி­மான சட்­டங்­களின் மீறல்­களை வகைப்­ப­டுத்த தவ­றி­ய­மை­யா­னது, அந்த நடை­மு­றைகள் அங்கு தொடர காட்­டப்­பட்ட பச்சை விளக்­குக்கு சம­ம­னா­னது என அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
 
அர­பு­லகில் மிகவும் பிர­ப­ல­மான மற்றும் மிகப் பெரிய நாடான எகிப்து பலஸ்­தீன மக்­க­ளுக்கு உதவும் வகையில் தனது ஒரு விரலைக் கூட உயர்த்தப் போவ­தில்லை. காரணம் அமெ­ரிக்க நிதி உத­விக்கு அடி­மை­பட்­டுள்ள அந்த நாட்டின் இன்­றைய நிலை.
 
எவ்­வா­றேனும் மீண்டும் ஒரு தடவை அரபு வீதிகள் தான் சமா­தா­னத்­துக்­காக அமை­தி­யாக வேண்­டுதல்; நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. கஸப்­லங்கா, அல்­ஜியர்ஸ், டூனிஸ், கெய்ரோ, அம்மான், பெய்ரூத், டமஸ்கஸ், பக்தாத், மனாமா ஆகிய பிராந்­திய தலை நக­ரங்­களில்; பலஸ்­தீன மக்­க­ளுக்கு அத­ரவு தெரி­வித்து இடம்­பெற்­றுள்ள ஆர்ப்­பாட்­டங்கள் இங்கே குறிப்­பி­டத்­தக்­கவை. பலஸ்­தீன மக்­களின் அடிப்­படை உரி­மை­களை வலி­யு­றுத்­தியும், அவர்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­களைக் கண்­டித்தும், அந்த மக்கள் எதிர்­கொண்­டுள்ள பயங்­க­ர­மான வாழ்வுச் சூழலில் கவனம் செலுத்­தியும் இந்த ஆர்ப்­பாட்­டங்­களின் போது கோஷங்­களும் எழுப்­பப்­பட்­டுள்­ளன.
 
அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய அர­சுகள், அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் பற்றி அலட்டிக் கொள்­வதே இல்லை. உதா­ர­ணத்­துக்கு, அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்­கான தனது 14.3 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான இரா­ணுவ உதவித் திட்­டத்தை அறி­வித்த அடுத்த தினமே அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் அன்­டனி பிளிங்கன் மூன்­றா­வது தட­வை­யா­கவும் இஸ்­ரே­லுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் பலஸ்­தீ­னர்­களை கொல்­வதை சற்று குறைத்துக் கொள்­ளுங்கள் நிறுத்தத் தேவை­யில்லை என்ற ரீதியில் தான் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
 
மத்­திய கிழக்கின் பரி­தா­ப­க­ர­மான நிலை இதுதான். இந்தப் பின்னணியில் உலகப் பகழ் பெறற புரட்சி வீரர் சே குவேராவின் மகள் அலீடா குவேரா, அரபு சர்வாதிகாரிகள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை காப்பாற்றாமல் எதற்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள் என்று அவர் கேட்டுள்ளார்.
 
உலகம் முழுவதும் பலஸ்தீன மக்களுக்காக பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் அரபு சர்வாதிகாரிகள் மட்டும் அல்ல சியோனிஸ யூதத்தின் கொடிய மற்றும் தீய பண்புகளும், அவற்றின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதரவாளர்களும் தோலுரிக்கப்படுகின்றனர்.
 
அரபிகள் அவர்களது ஆட்சியாளர்களின் தயவில் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கு ஒரு கொந்தளிக்கும் எரிமலையாக காணப்படுகின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்போது, அந்தப் பிராந்தியமும் உலகும் முன்னொருபோதும் சந்தித்திராத விளைவுகளை சந்திக்க வேணடியிருக்கும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies