பல ஆண்டு கால ரகசியத்தை உடைத்த DNA டெஸ்ட்.. விளையாட்டு விபரீதமானது எப்படி..?
DNA சோதனை முடிவில் அவருக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி.. ஆம், அந்த சோதனையில் அவரின் சகோதரர் மற்றும் சகோதரிக்கு ஒத்து போன டிஎன்எஸ
“விளையாட்டு விபரீதம் ஆகிடும்” என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம், எப்போதும் விளையாட்டாக நாம் செய்யும் விஷயங்களோ, அல்லது விளையாட்டுத்தனமாக வாழ்க்கையில் சுவாரசியத்தை கூட்டுகிறேன் என்று செய்யும் செயல்கள் பலவும் விபரீதத்தில் முடிந்துள்ளது. அதேபோல்தான் இங்கும், விளையாட்டாக ஆரம்பித்த ஒரு செயல், குடும்பத்தின் நிம்மதியை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டது. பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த ரகிசயம் ஒன்று வெளிப்பட்டு, குடும்பத்தில் மிகப்பெரிய விரிசலையே ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டிட் என்ற இணையத்தளத்தில் பலரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத, கடந்து வர இயலாத பல சம்பவங்களை அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பதிவிடுவது உண்டு. அவ்வாறு பதிவிடப்படும் பல சம்பவங்கள் இணையத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று வைரலாவதும் உண்டு. அப்படிதான், ஐரோப்பாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது ரெட்டிட் தலத்தில் பதிவிட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. நண்பர் ஒருவர் இவருக்கு DNA கிட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதை தனது சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து விளையாட்டாக சோதித்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார். மேலும் ,இதன் மூலம் தங்களின் கிழக்கு ஐரோப்பிய பாரம்பரியத்தை பற்றியும் தெரிந்துகொள்ள முடியும் என்று DNA சோதனை செய்துள்ளனர்.
DNA சோதனை முடிவில் அவருக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி.. ஆம், அந்த சோதனையில் அவரின் சகோதரர் மற்றும் சகோதரிக்கு ஒத்து போன டிஎன்எ, இவருக்கு முற்றிலும் பொருந்திப்போகவில்லை.. அதாவது, அவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவர்தான் ஆனால், இவ்வளவுநாள் தனது தந்தை என்று நினைத்து வந்த நபர் தனது சொந்த தந்தை இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இதை நம்பவேண்டாம் கிட்டில் ஏதாவது பிரச்னை இருக்கும் என்று இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவரின் சகோதரி மிகவும் அதிர்ச்சியடைந்து இது குறித்து தாய் தந்தையிடம் தனித்தனியாக இதுகுறித்து பேசியுள்ளார்.
முதலில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கோபத்தில் இவரின் தாயார் கத்தியுள்ளார். தந்தையோ இதை கேட்டதும் மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டார். பிறகு, உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீ எனக்கு பிறக்கவில்லை என்றாலும், நீ எப்போதும் என் சொந்த மக்கள்தான் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரி, ’ உனது உண்மையான தந்தை யார் என்பதை நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன் என்று கூறியதாக தெரிவித்த அவர்,
இதை கேட்டதும் மனமுடைந்த போனதாக பதிவிட்டுள்ளார். தனது தாயார் இதுகுறித்து பேசவும், விளக்கம் கொடுக்கவும் இவரிடம் பலமுறை முயற்சி செய்தபோதும், அதை கேட்க தான் தயாராக இல்லை என்றும், இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் இத்தனை ஆண்டு காலமாக எவ்வாறு அவர்களால் மறைக்க முடிந்தது என்று மனமுடைந்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.