.
.
கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பின் இருக்கும் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
யுனெஸ்கோ வரலாற்று வாய்ந்த இடங்களில் ஒன்றான 4,500 ஆண்டுகள் பழைய எகிப்தின் கிரேட் ஸ்பிங்க்ஸ் எவ்வாறு கட்டப்பட்டது என்பதை இறுதியாக கண்டுபிடித்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பல தசாப்தங்களாக, நிபுணர்கள் கிசாவில் உள்ள சின்னமான சுண்ணாம்பு சிலையின் முகம் கையால் செதுக்கப்பட்டதாக நம்பிவந்தனர்.
ஆனால் இப்போது, நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இது அரிப்பு டெக்னீக் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். மணல் நிறைந்த பாலைவனத்தில் நடுவே சில பிரமிடுகள் நிற்பதே அதிசயித்து பார்க்கும் விஷயமாக இருக்க அதில் பிரமாண்ட மனிதமுகம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.
.
இந்நிலையில் அந்த மனித முகம் சிற்பிகளால் செதுக்கப்பட்டு உருவானது என்ற நம்பிக்கையே நிலவி வந்த நிலையில் 1981 ஆம் ஆண்டில் புவியியலாளர் ஃபாரூக் எல்-பாஸால் என்பவர் ஒரு புதிய கோட்பாட்டைக் கொண்டுவந்தார். அதில் இது முழுக்க மனிதனின் முயற்சி இல்லை. இது இயற்கையின் அரிப்பு தன்மையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
அவரது இந்த கோட்பாட்டை அடிப்படையாக வைத்து பல ஆய்வுகள் நடந்து வந்தன. அப்படி நியூயார்க் பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் சில விஷயங்களை கண்டறிந்து இப்போது வெளியிட்டுள்ளனர். “எங்கள் கண்டுபிடிப்புகள் அரிப்பிலிருந்து ஸ்பிங்க்ஸ் போன்ற வடிவங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான சாத்தியமான ‘தோற்றக் கதையை’ வழங்குகின்றன” என்று ஆய்வின் மூத்த எழுத்தாளர் லீஃப் ரிஸ்ட்ரோப் கூறினார்.
.
“எங்கள் ஆய்வக சோதனைகள் வியக்கத்தக்க வகையில் ஸ்பிங்க்ஸ் போன்ற வடிவங்கள், உண்மையில், வேகமான காற்றின் ஓட்டங்களால் அரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து வந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது,” என்று அவர் மேலும் கூறினார். எகிப்து மக்கள் இயற்கையின் அரிப்பு தன்மையை சரியாக பயன்படுத்தும் நுட்பம் அறிந்து இதை செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் “இந்த முடிவுகள் எகிப்தின் பாலைவனங்களில் பழங்கால மக்கள் என்ன சந்தித்திருக்கலாம் மற்றும் அவர்கள் எப்படி ஒரு அற்புதமான உயிரினத்தை கற்பனை செய்தார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று திரு ரிஸ்ட்ரோஃப் ஆய்வில் எழுதினார்.
.
மேலும், அவர்களின் கோட்பாட்டை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலைவனங்களில் காணப்படும் yardangs எனப்படும் அசாதாரண பாறை அமைப்புகளுக்கு எதிராக காற்று எவ்வாறு உருவாக்குகிறது மற்றும் நகர்கிறது என்பதை ஆய்வு செய்தது. வடகிழக்கு எகிப்தில் நிலப்பரப்பைப் பிரதிபலிக்க, அவர்கள் மென்மையான களிமண்ணின் மேடுகளை எடுத்து, கடினமான, குறைந்த அரிக்கும் பொருள் உள்ளே வைத்து சோதித்தார். காற்றுக்கு பதிலாக ஓடும் நீரோடை மூலம் இந்த அமைப்புகளை கழுவி அரிப்பை சோதனை செய்தனர்.
.
இறுதியில், நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் குழு, களிமண் இறுதியில் ஒரு ஸ்பிங்க்ஸ் போன்ற உருவாக்கத்தை ஒத்திருப்பதைக் கண்டுபிடித்தது. பின்னர் அதன் அமைப்புகளை சோதித்தபோது அது சிங்கத்தின் தலை, தாடை ,கழுத்து, பாதங்கள் , வளைந்த முதுகு போன்ற உருவங்கள் வந்ததை கவனித்துள்ளனர்.
இதனால் புவியியலாளர் ஃபாரூக் எல்-பாஸால் முன்மொழியப்பட்ட ஒரு கோட்பாட்டின்படி மணலை அரிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மாதிரிகளை ஆராய்ந்தபோது வந்த உருவங்கள் அதற்கு சான்றாக மாறியுள்ளன.