.காதலனுடன் ஓடிய மனைவி... சரக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த கணவன்.
07 Oct,2023
. .
கள்ளக்காதலனுடன் மனைவி ஓடிப் போனதால் மன உளைச்சலுக்கு உள்ளான கணவன், ஊருக்கே மது விருந்து வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
.
திருவனந்தபுரம்: தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப் போனதை அறிந்த கணவன், அந்த ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் வீட்டிற்கு அழைத்து பிரியாணியும், சரக்கு பார்ட்டியும் கொடுத்து ஆட்டம் போட்ட சம்பவம் கேரளாவையே மிரள வைத்துள்ளது.
.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் ஆன நாள் முதலாகவே கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனிடையே, அண்மைக்காலமாக வேறொரு நபருடன் அந்தப் பெண் அடிக்கடி போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதை அவரது கணவரும் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
.
இந்நிலையில், கடந்த வாரம் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவருக்கு, இந்த விஷயம் தெரியவர அதிர்ச்சியில் உறைந்தார். அன்று இரவு முழுவதும் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
.
அதன் பின்னர், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அடுத்த நாள் காலை அந்த ஊரில் உள்ள 250-க்கும் மேற்பட்ட ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து மது விருந்தும், கிடா பிரியாணி சாப்பாட்டையும் போட்டு பார்ட்டி கொடுத்திருக்கிறார். பின்னர் மது அருந்திவிட்டு அனைவருடனும் அவர் உற்சாகமாக ஆடி பாடினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதை, ஊருக்கே விருந்து கொடுத்து கணவன் கொண்டாடிய சம்பவம் கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.