மனிதன் பாதி. குரங்கு பாதி.. வியப்பில் ஆழ்த்தும் புதிய இனம்?
30 Aug,2023
4 கால்களில் நடக்கும் விசித்திர குடும்பத்தினர்4 கால்களில் நடக்கும் விசித்திர குடும்பத்தினர்
நவீன காலத்தில் இப்படியொரு சம்பவம் இருக்கும் என்பதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் கூறியுள்ளார்.
துருக்கி நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 கால்களால் நடந்து வருகின்றனர். அவர்களால் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்று 2 கால்களால் நடக்க முடியாத சூழலில் இந்த நிகழ்வு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் ஒன்று கடந்த 2006- ஆம் ஆண்டு வெளியானது.
அன்றிலிருந்து இன்று வரைக்கும், 4 கால்களில் ஒரே குடும்பத்தினர் நடப்பதற்கான காரணத்தை அறிய முடியாமல் விஞ்ஞானிகள் திகைத்து வருகின்றனர். இதுதொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பேராசிரியர் ஹம்ப்ரே கூறுகையில், ஒரு குடும்பத்தில் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர் பிறக்கும்போது மற்ற மனிதர்களை விடவும் சற்று வித்தியாசமாக பிறந்துள்ளனர். நம்முடைய முன்னோர்கள் 4 கால்களை பயன்படுத்தி பின்னர் பரிணாம வளர்ச்சியின் காரணாக 2 கை மற்றும் 2 கால்களை உடையவர்களாக மாறினர் என்று ஒரு கருத்து உள்ளது. இதற்கு எதிரான கருத்துக்களை கூறுவோரும் உள்ளார்கள்.
முன்னோர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் துருக்கியை சேர்ந்த இந்த குடும்பத்தினர் 4 கால்களில் நடக்கிறார்கள். இந்த குடும்பத்தில் பிறந்த 6 ஆவது நபரும் இதேபோன்று 4 கால்களில் நடந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்து விட்டார்.
நவீன காலத்தில் இப்படியொரு சம்பவம் இருக்கும் என்பதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மனிதன் பின்னோக்கி செல்ல தொடங்கிவிட்டானா என்று கருத தோன்றுகிறது. இதுகுறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். உலகில் மற்ற இடங்களில் இதுபோன்ற நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்ப வேண்டும்.
அதே நேரம், 4 கால்களில் நடக்கும் குடும்பத்தினருக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.