பகல் கனவு பலிக்காது, அதிகாலை கனவு நிச்சயம் பலிக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக உள்ளது. எந்தெந்த கனவுகள் நமக்கு நன்மை தரும், எந்தெந்த கனவுகள் கெடுபலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு - ரூ. 24,999/-
நம் இந்து சமயத்தில் பல சாஸ்திரங்கள் உள்ளன. சொப்ன சாஸ்திரம் என்று உள்ளது. அதில் கனவு குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த கனவுகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் வரக்கூடிய கனவுகள் பலிக்கும் போன்ற விஷயங்களும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பதிவில் எப்படிப்பட்ட கனவுகள் நமக்கு கெடுபலனைத் தரும் என்பதைப் பார்ப்போம்.
கனவுகளும் பலன்களும்
நாம் அன்றாட செய்யக்கூடிய செயல்கள், சூழல்களை ஒட்டி நமக்கு கனவுகள் வரும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. ஆனால் நம்மில் பலருக்கு சம்பந்தமே இல்லாத ஹாலிவுட் படம் போல பல பிரமாண்ட கனவுகளும், இதுவரை யோசித்துக் கூட பார்க்காத விஷயங்கள் புதிது, புதிதாக நமக்கு கனவாக வருவதும் உண்டு.
அதில் சில கனவுகள் நமக்கு மன மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவும், சில கனவுகள் நமக்கு பயத்தையும், அகோரமாகவும், பயங்கரமானதாக, அச்சுறுத்துவது போல கனவுகள் வருவதும் உண்டு.
பதவி உயர்வு தரும் கனவு
விவசாயி நிலத்தை உழுவதைப் போல கனவு கண்டால், உங்களின் வருமாய் பெருகிச் சேமிப்பு அதிகரிக்கும்.
வானவில் உங்கள் கனவில் வந்தால் உங்களின் செல்வாக்கும், செல்வமும் அதிகரிக்கும்.பதவி உயர்வு கூட வந்து சேரும்.
நிலாவை உங்களின் கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும்.
சுப நிகழ்ச்சி நடக்க உள்ளதை உணர்த்தும் கனவு
திருமணம் ஆகாதோர், யாரேனும் அல்லது அவருக்கே பாம்பு தீண்டி ரத்தம் வருவது போல கனவு கண்டால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
திருமணம் ஆனவராக இருப்பின் அவருக்கு செல்வம் வந்து சேரும்.
ஆசிரியர் பாடம் நடத்துவது போல கனவு கண்டால் நினைத்த விஷயங்கள் நிறைவேறும்.
கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்?
உங்கள் கனவில் தெய்வங்கள் வந்தால் உங்களுக்கு பணம், பாராட்டுகள் குவியும். உங்களுக்கு புதையல், அதிர்ஷ்டம் கிடைக்கும்.
கடவுகளின் திருமண கோலத்தைக் கண்டால் உங்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு வரும் ஆபத்துக்கள் நீங்கி நன்மை கிடைக்கும்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் பலன்
உங்கள் நண்பர் இறந்தது போல கனவில் கண்டால், அந்த நண்பனின் ஆயுள் கூடும்.
இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளும், உடல் நலமும் வந்து சேரும்.
இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு அதிகாரம், லாபம், பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். இறந்தவர்களின் சடலம், இறுதி ஊர்வலத்தைக் கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?
உங்கள் கனவி மீன், ஆமை, தவளை போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வந்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளும், கவலைகளும் விலகி ஓடும்.
மயில், குயில், வானம் பாடி போன்ற பறவைகள் கனவில் கண்டால் தம்பதியிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும்.
குதிரை, கழுதை, மாடு போன்ற கால்நடைகள் உங்களின் கனவுகள் வந்தால் வழக்குகள் சாதகமாக முடியும். பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.
மலத்தை கனவில் கண்டால் சுப செலவுகள் உண்டாகும்.
கனவில் எருமை மாடு வந்தால் கெட்டது நடக்குமா? - பசு, நரி போன்ற விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?
கெட்ட கனவுகள் : கவனம் தேவை :
பசு விரட்டுவதைப் போல உங்கள் கனவில் வந்தால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
உங்களுக்கு நோய் பாதித்தது போல கனவில் கண்டால் உங்களை நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.
யாரேனும் அடிபட்டு ஊனமாவது போல கனவு வந்தால் உங்களுக்கு மோசமான செய்தி வந்து சேரும்.
யாரேனும் முத்தமிடுவது போல கனவு கண்டால் உங்களின் செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளது.
நிர்வாணமாக இருப்பது போல கனவில் கண்டால் உங்களுக்கு அவமானம் தேடி வரும்.
குதிரையிலிருந்து நீங்கள் விழுவதைப் போல கனவு வந்தால் வறுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
சமையல் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு அவமானம் ஏற்படலாம்.
முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால் பொருளாதாரம் சரியும்.