நான் தான் இயேசு.." வாழும் இயேசு' : சிலுவையில் அறைய துரத்தும் கென்யா மக்கள்!
10 Mar,2023
கடவுள் நம்பிக்கை உலகம் முலுவதும் கோடிக் கணக்கான மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தங்களுக்கு நேரும் எல்லா நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணம் கடவுள்தான் என பலரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வியாபாரமாக்கி காசு பார்க்கும் கூட்டமும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.
இந்து, கிறித்துவம், இஸ்லாம் என பாகுபாடு இல்லாமல் எல்ல மதங்களிலும் இது போன்ற கும்பல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்ச காலத்திலேயே அவர்கள் பாடமும் கற்றுக் கொண்டுவிடுவார்கள். அப்படி ஆப்பரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் ஏசு கூறிக்கொண்டு இருந்த நபர் இப்போது தன் உயிரைக் காப்பாற்றுமாறு காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் தன்னைத் தானே வாழும் ஏசு எனக் கூறி வந்துள்ளார். 20 வயதில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு 8 குழந்தைகள். கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த சண்டையில் சிமியுவின் தலையில் கொஞ்சம் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
அதன் பிறகு தன்னை வாழும் ஏசு எனக் கூறிக்கொண்டு சிமியு மதப்பிரச்சாரமும் செய்து வருகிறார். தனது பெயரையும் டோங்கரேன் வா யேசு என மாற்றிக் கொண்டார். அவரை நம்பி ஒரு கூட்டமும் இருக்கிறதாம். வாழும் ஏசுவாகிய தனது கணவர் தண்ணீரை தேனீராக மாற்றியதாகவும், அதைக் கிராம மக்கள் அனைவரும் குடித்தனர் என்றும் வாழும் ஏசுவின் அற்புதத்திற்கு சாட்சி கூறியிருக்கியார் சிமியுவின் மனைவி.