சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது.
இதற்கிடையே கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பிரபல்யம்மிக்க தமிழர்களில் ஒருவராக உள்ளவர் நித்தியானந்தா சுவாமிகள். சிறிய வயதில் ஆன்மீக ரீதியாக முன்னேற்றம் கண்ட நித்தியானந்தாவை உலகம் கொண்டாடத்தான் செய்தது. ஊடகங்களில் ஆன்மீக தொடர்களையும் வழங்கினார்.
ஆனால் பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் வெளிநாட்டுக்க தப்பி சென்றுவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு கைலாசாவை சுற்றிப்பார்க்க உலக பக்தர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. நித்தியானந்தாவின் நகைச்சுவை பேச்சு காரணமாக அவருக்கு பக்தர்களைவிட அதிகமாக ரசிகர்களும் உருவாகினர். இணையவாசிகளின் மீம்ஸ்களிலும் அவருக்கு தனியிடம் கிடைத்துவிட்டது.
இதற்கிடையே நித்தியானந்தா உயிருடம் இல்லை இறந்துவிட்டார் கோமா நிலையில் இருக்கின்றார் என்ற செய்தியும் இணையத்தில் பரவலாக கசிந்தது. ஆனால் பல மாதங்களின் பின்னர் தான் தியானநிலையில் இருந்ததாக நித்தி காணொளிகளை வெளியிட்டார்.
இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா வின் பொருளாதார, சமூக, மற்றும் காலாசார உரிமைகள் குழு கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் நித்தியானந்தாவின் சமூகவலைத்தல பக்கங்களில் வெளியிடப்பட்டன. ‘முடிவெடுக்கும் விடயங்களில் பெண்களுக்கு சம உரிமை’என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதில் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள். நிலையான வளர்ச்சிக்கு கைலாசா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். மேலும். உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.
பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும் இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு.. இந்த தொந்தரவை தடுத்து நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஐ.நா அமைப்பில் 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கைலாசா இடம் பெறவில்லை. இதில் இடம் பெற ஐ.நா பாதூப்பு கவுன்சில் மற்றும் பொது சபை அனுமதி வேண்டும்.
ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிக்கிறது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியிருந்தார்.
இதனிடையே, கற்பனையான நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்படி அனுமதி அளித்தது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இதற்கு ஐ.நா., ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி அளிக்கும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “கைலாசாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெப்ரவரி மாதம் நடந்த ஐ.நா. சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்புடன் சற்றும் தொடர்பில்லாத கருத்து நித்தியானந்தாவின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களின் கருத்து ஐக்கிய நாடுகள் சபையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றன.
இதுகுறித்து ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒப் கைலாசா’ என்ற பெயரில் பிரதிநிதிகள் பங்கேற்று ஐ.நா. கூட்டத்தில் பேசிய கருத்துகள் பொருத்தமற்றவை. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு பொருத்தமாக அவர்கள் எந்தக் கருத்தையும் பேசவில்லை.
அத்துடன், அந்தக் கருத்துகள் ஐ.நா. இறுதி வரைவு அறிக்கையிலும் இடம்பெறாது. ஐ.நா. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநாவின் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற கைலாசாவின் பெண் சீடர் விஜயபிரியா பேசும்போது, பகவான் நித்தியானந்தா பிறந்த இந்தியாவில் இந்து விரோத சக்திகளால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்.
இந்தியா மீது அவர் மிகவும் மதிப்பு வைத்துள்ளார். இந்தியா அவரது குருபீடமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய பேச்சு.உள்நோக்கத்துடன் திரித்து கூறப்படுகிறது. இந்து விரோத சக்திகள் திட்டமிட்டு திரித்துகூறுகின்றன’’ என்று கூறியுள்ளார்.
குறித்த பெண் சீடர் விஜயபிரியா அமெரிக்காவின் வாஸிங்டனை சேர்ந்தவர். ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 4 மொழிகள் தெரிந்தவர். கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் 2014-ஆம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைலாசா என்ற நாட்டை நித்தியானந்தா உருவாக்கி அவரது பிரதிநிதிகள் ஐநா சபையிலும் உரையாற்றிவிட்டதாக நித்தியின் பக்தர்கள் பெருமைபட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் , கைலாசா உள்ளிட்ட அனைத்தும் கற்பனை நித்தியானந்தாவின் பெணண் சீடர்கள் வெறும் ஒரு அமைப்பாக மட்டுமே ஐநாவில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிள்றது.
இந்நிலையில் தற்போது நித்தியானந்தா தன்னுடைய நாட்ழல் வசிப்பதற்கான குடியுரிமையை தனது பக்தர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் உன்று தெரிவித்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் அவரது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது வரை கைலாசாவிற்கு எப்படி செல்வத என வழி தேடியவர்களுக்கு இது இனிப்பான செய்தியாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து உலகளவில் இருந்து அவரது பக்தர்கள் கைலாசா நாட்டின் குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இது வேடிக்கையை மட்டும் அல்ல பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
என்ற முகவரியில் இந்த விண்பத்தை நாம் மேற்கொள்ளலாம் என நித்தியானந்தாவின் சமூகதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது